Friday, May 3, 2024
- Advertisement -
Homeசினிமா“ சிவகார்த்திகேயன் பட இயக்குனரை போன மாதம் வரை திட்டினேன்… ” – நெல்சன் சொன்ன...

“ சிவகார்த்திகேயன் பட இயக்குனரை போன மாதம் வரை திட்டினேன்… ” – நெல்சன் சொன்ன நகைச்சுவையான கதை.. !

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், மோகன்லால், சிவா ராஜ்குமார், பிரியங்கா அருள் மோகன், தமன்னா, வசந்த் ரவி மற்றும் பல பிரபலங்கள் நடிக்கும் திரைப்படம் ஜெயிலர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க நெல்சன் இயக்குகிறார். ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில் வருகின்ற விநாயகர் சதுர்த்திக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

- Advertisement -

மிகப் பெரிய படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் நெல்சன் அவ்வப்போது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். விகடன் விருது விழாவுக்கு கோலிவுட்டின் நட்சத்திரங்கள் பலர் வந்திருந்தனர். இவ்விருது நிகழ்ச்சி மிகச் சிறப்பாக முடிவடைந்தது. நாளை ஞாயிற்றுக்கிழமை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபர்ப்பாகிறது.

இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் செல்சன் தன் நன்பரைப் பற்றி சுவாரசியமான விஷயம் ஒன்றைப் பகிர்ந்தார். அந்த நண்பர் சக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி ஆவார். நெல்சன் கூறியதாவது, “ சிவகார்த்திகேயனைப் போல ராஜ்குமார் நண்பரும் 18 வருடங்களாக பழக்கம். எல்லோர்க்கும் போல எனக்கும் இயக்குனர் மணிரத்னம் தான் இன்ஸ்பிரேசன். விஜய் தொலைக்காட்சியில் பணிபுரிந்து கொண்டிருந்த போது ஒரு நிகழ்ச்சியில் மணி சாரைப் பார்த்தேன். ”

- Advertisement -

“ அந்த காலத்தில் சிறிய கேமரா மொபைலை வைத்திருந்த ராஜ்குமார் என்னையும் மணி சாரையும் ஃபோட்டோ எடுத்தார். எது நான் எது மணி சார் என்ற அளவுக்கு அடையாளம் தெரியாத ஃபோட்டோ. பெரிய மனிதருடன் புகைப்படம் எடுத்துவிட்டேன் என்ற அளவில்லா சந்தோசத்தில் நான் இருந்த போது அடுத்த மொபைலை தொலைத்துவிட்டதாக ராஜ்குமார் கூறினார். இதற்காக நான் அவரை போன மாதம் வரை திட்டினேன். ” என நகைச்சுவையாக சிரித்துக் கொண்டே கூறினார் நெல்சன்.

- Advertisement -

படங்களில் மட்டுமல்ல சொந்த வாழ்கையில் கூட நகைச்சுவையாக ஜாலியாக இருக்கும் கேரக்டர் கொண்டவார் இயக்குனர் நெல்சன் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

Most Popular