சினிமா

ஹைதராபாத் டூ சென்னை.. மாறி மாறி பணிபுரியும் ஷங்கர்

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் திரைப்படத்தினுடைய இரண்டாம் பாகத்தை பற்றிய தகவல் தற்பொழுது வெளியாக இருக்கிறது. இயக்குநர் சங்கர் இந்தியன் 2 திரைப்படம் எடுக்கும் அதே சமயத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ராம்சரண் தேதியினுடைய 15 வது படமாகிய ஆர்சி 15 என்று திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

Advertisement

இந்தத் திரைப்படத்தில் நடிகர் ராம்சரண் தேஜுடன் இணைந்து நடிகை கியாரா அத்வானி ,அஞ்சலி தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், சுனில் மலையாள நடிகர் ஜெயராம், தமிழ் நடிகர் சமுத்திரக்கனி ,நாசர் என்ற பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். மேலும் இந்த திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் உடைய முன்னணி நடிகர்கள் ஒருவரான எஸ்ஜே சூர்யா நடித்து வருகிறார். மேலும் இந்த திரைப்படம் மகாராஷ்டிரா ஹைதராபாத் விசாகப்பட்டினம் ஆந்திர பிரதேஷ் மற்றும் பஞ்சாப் போன்ற இடங்களில் படப்பிடிப்பு எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இயக்குனர் சங்கர் இந்த திரைப்படம் எடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் இந்த திரைப்படத்தில் தான் அவர் முழுமையாக ஈடுபட்டு இருக்கிறார். இதனால் இதே சமயத்தில் எடுக்கப்பட்டு இந்தியன் 2 திரைப்படத்தின் உடைய படப்பிடிப்பில் நிறைய அசிஸ்டன்ட் டைரக்டர்களை வைத்து எடுத்து வந்தார் இயக்குனர் சங்கர்.

Advertisement

ஆனால் தற்பொழுது இயக்குனர் சங்கர் மீண்டும் இந்தியன் 2 திரைப்படத்தின் உடைய படப்பிடிப்பிற்கு இணைந்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது
2.0 திரைப்படத்திற்குப் பிறகு இயக்குனர் ஷங்கர் தன்னுடைய இரண்டு படங்களை ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார் என்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இயல்பாகவே இயக்குனர் சங்கரின் திரைப்படங்கள் பிரம்மாண்டமாக இருக்கும் என்பது ரசிகர்கள் மத்தியில் இருக்கும் கருத்து ஆகும் மேலும் ஒரே நேரத்தில் இரண்டு வீடு கதைக்களத்தை இயக்குனர் சங்கர் படமாகி வருவது பாராட்டக்கூடிய செயலாகும்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top