சினிமா

தவறு நடந்துவிட்டது.. விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர் வம்சி

வாரிசு திரைப்படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து வரும் நிலையில் விஜய் ரசிகர்களிடம் இயக்குனர் வம்சி மன்னிப்பு கேட்டிருக்கும் சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக விஜயின் ஓப்பனிங் சாங் செம மாஸாக இருக்கும் ஆனால் வாரிசு திரைப்படம் முற்றிலும் மாறுபட்டு விஜய் சாதாரணமாக ஓப்பனிங் சாங்கில் இருப்பார். இதைப் பார்க்கும்போது ரசிகர்களுக்கு சச்சின் காலத்துக்கு கொண்டு சென்றது.

Advertisement

இந்த நிலையில் வா தலைவா பாடல் தமன் இசையில் சிறப்பாக ஒளிப்பதிவு செய்யப்பட்டாலும் அதன் கிராபிக்ஸ் காட்சிகள் படுமோசமாக இருந்ததாக ரசிகர்கள் குற்றம் சாட்டினர். கிரீன் ஸ்கிரீனில் எடுக்கப்பட்ட அனைத்து காட்சிகளும் செயற்கை தனமாக தெரிந்ததாகும், அது படத்துடன் ஒட்டவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். அதேபோன்று படத்தின் பல்வேறு காட்சிகளை பட குழு இதே போன்ற எடுத்து விட்டதாகவும் விமர்சனம் இருந்தது.

ஒரு ஆண்டுக்கு மேல் நேரமிருந்தும் இதை சரி செய்யாமல் படக் குழு விட்டுவிட்டதாகவும், படத்தின் மைனஸ் என்று சொன்னால் இதனை மட்டும் கூறலாம் என்றும் பலரும் விமர்சித்து இருந்தனர். இந்த நிலையில் இதற்கு இயக்குனர் வம்சி மன்னிப்பு கேட்டுள்ளார். போதிய நேரமின்மை காரணத்தால் எங்களால் சரியாக கிராபிக்ஸ் காட்சிகளை எடுக்க முடியவில்லை என்றும் இதனால் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் குவாலிட்டி இல்லாமல் வந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

Advertisement

இயக்குனர் வம்சையின் இந்த பேச்சு பல்வேறு விமர்சகர்களை நெகழ்ச்சி அடைய செய்திருக்கிறது. தவறை இதுபோன்றுதான் ஒப்புக்கொண்டு திருத்திக்கொள்ள அனைவரும் முன்வர வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். துணிவு திரைப்படம் 12ஆம் தேதி திரைக்கு வர இருந்த நிலையில் அது ஒரு நாள் முன்பு சென்றதால் வாரிசு திரைப்படமும் அதே நாளில் ரிலீஸ் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. இதன் காரணமாக வெளிநாடுகளுக்கெல்லாம் படத்தை அனுப்ப வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாக பட வேலைகள் நடைபெற்றது. இதனைத் தான் நேரம் போகவில்லை என்ற காரணமாக வம்சி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top