Monday, April 29, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாஅய்யயோ பயங்கரமான ஆள் போலயே.. இவரா அடுத்த தளபதி.. கலாய்த்து தள்ளிய இயக்குனர் வெங்கட் பிரபு......

அய்யயோ பயங்கரமான ஆள் போலயே.. இவரா அடுத்த தளபதி.. கலாய்த்து தள்ளிய இயக்குனர் வெங்கட் பிரபு… !

தளபதி விஜய் முழு நேர மக்கள் பணிக்காக அரசியல் வந்துள்ளதால் விரைவில் சினிமாவில் இருந்து முழுமையாக விலகவுக்கதாக தெரிவித்துள்ளார். தற்போது செய்து கொண்டிருக்கும் கோட் படத்தோடு ஒப்பந்தம் செய்த மற்றொரு படம் மட்டுமே நடிக்கவுள்ளார். அவரின் இந்த அறிவிப்புக்கு அடுத்து சமூக வலைத்தளத்தில் யார் அடுத்த தளபதி என பல்வேறு தரப்பு ரசிகர்கள் விவாதம் செய்தனர்.

- Advertisement -

அண்மையில் கன்டென்ட் கிரியேட்டர்களில் ஒருவரான காத்துக் கருப்பு கலை இது குறித்து ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது தான் தான் அடுத்த தளபதி என அவர் நடிக்கும் படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி பிரபல இயக்குனர்கள் வரை சென்றுள்ளது. இந்தப் பதிவை ரீ-டுவீட் செய்து இயக்குனர்கள் வெங்கட் பிரபுவும் சி.எஸ்.அமுதனும் நகைச்சுவை செய்துள்ளனர்.

காத்து கருப்பு கலை முதலில் டிக் டாக் மூலம் கோமாளித் தனமான வீடியோக்கள் பதிவிட்டு பிரபலமானார். அதன் பிறகு தற்போது ரிபஃப்லக்ட் டாக்ஸ் யூடியூப் சேனலில் தொகுப்பாளராக நகைச்சுவை நேர்காணல்கள் செய்து வருகிறார். அடுத்தகட்டமாக சினிமாவில் கதாநாயகனாக நடிக்க முன்வந்துள்ளார்.

- Advertisement -

அவர் நடிக்கும் அடுத்தப் படத்தின் தலைப்பு, “ இரத்த பூமி “ ஆகும். இதனை இயக்குபவர் பேசியதாவது, “ அடுத்தத் தளபதி காத்துக் கருப்பு கலை தான். ஆக்சன் ஹீரோவாக வர எல்லாத் தகுதியும் இவரிடம் உள்ளது. தளபதி எனும் இடம் காலியாக உள்ளது, அதனை இவர் தான் நிரப்பவுள்ளார். “ என்றார்.

- Advertisement -

இவர் பேசிய வீடியவை ரீ-டுவீட் செய்து இயக்குனர் வெங்கட் பிரபு, “ நமக்கு செம போட்டியக்ரகளாக வருவாங்க போலயே அமுதன் சார் ” என்றார். இதற்கு இயக்குனர் அமுதன், “ நாம் நமது இடத்தை சுலபமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இவர்களுடன் இணைந்து களத்தில் இருக்க உழைத்துக் கொண்டே இருக்கணும். ” எனப் பதிவிட்டார். காத்துக் கருப்பு கலை பலிசிட்டிக்காக நகைச்சுவையாக பேசியது இவர்களது அளவு சென்றுள்ளது.

Most Popular