சினிமா

வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாவது பாகம்.. கெளதம் மேனன் வெளியிட்ட சூப்பர் அப்டேட்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் நடிகர் சிம்புவை கதாநாயகனாக வைத்து விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சமென்பது மடமையடா என்று வித்தியாசமான காதல் கதைக்களத்தைக் கொண்ட திரைப்படங்களை இயக்கி அதை வெற்றி பெற செய்து இருக்கிறார். இதைத்தொடர்ந்து தற்பொழுது வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

Advertisement

இந்தத் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் கதாநாயகியாக சிதி இதானி நடித்திருக்கிறார். இவர் இந்த திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக தமிழ் சினிமாவிற்கு கால் எடுத்து வைத்திருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். இதனால் இந்த படம் நிச்சயம் இசையிலும் வெற்றி பெறும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தினுடைய ஒரு புது அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.பொதுவாகவே ஒரு சிறந்த கதைக்களத்தை கொண்ட திரைப்படத்தை ஒரே பாகமாக முடியாமல் இரண்டு மூன்று பாகங்களாக அமைந்திருக்கும்.எடுத்துக்காட்டாக த பிரம்மாண்டமான படைப்பாக அமைந்து ரசிகர்களிடையே பெரும் அளவில் பேசப்பட்ட திரைப்படம் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் பிரபாஸின் நடிப்பில் வெளியான பாகுபலி, இரண்டு பாகங்களாக எடுத்து வெற்றி பெற்றது.

Advertisement

மேலும் தற்பொழுது இயக்குனர் மணிரத்தினத்தின் நீண்ட கால கனவாக இருந்து தற்போது நினைவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படமும் இரண்டு பாகங்களாக அமைந்து வருகிறது. இதைத் தொடர்ந்து தற்பொழுது வெந்து தணிந்தது காடு திரைப்படமும் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது என்ற செய்தி வெளியாகியிருக்கிறது.

மேலும் இந்தத் திரைப்படத்தில் இரண்டாவது பாகத்தைப் பற்றிய ஒரு லீட் காட்சியோடு முதல் பாகம் முடிவடைகிறது. இதன் காட்சிகள் தற்பொழுது லக்னோவில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனால் நிச்சியம் இந்த திரைப்படம வெற்றியடையும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஒரு கிராமத்திலிருந்து வரும் இளைஞன் எப்படி தாதாவாக மாறி மும்பையில் கோள் வச்சுகிறார் என்பது ஒரு பாகமாகும் இரண்டாவது பாகத்தில் மும்பையில் தானாக மாறிய பிறகு அவர் சந்திக்கும் சிக்கல்கள் குறித்தும் படம் எடுக்கப்பட உள்ளது. இதற்கான கதையை ஜெயமோகன் எழுதியிருக்கிறார் அந்தக் கதை சிம்புவுக்கு பிடித்து விட்டதால் அவர் பச்சைக்கொடி காட்டியிருக்கிறார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top