Thursday, April 25, 2024
- Advertisement -
Homeசினிமாஒரே லொள்ளு தான் ! சிவகார்த்திகேயனுக்கு பெரியப்பாவாக நடிக்கும் கவுண்டமணி !

ஒரே லொள்ளு தான் ! சிவகார்த்திகேயனுக்கு பெரியப்பாவாக நடிக்கும் கவுண்டமணி !

கலக்கப்போவது யாரு மூலம் அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். காமெடி, நடனம் என கலக்கும் சிவகார்த்திகேயன் மிமிக்ரியும் பேசி அசத்துவார். ஒவ்வொரு காமெடி கலைஞனுக்கும் நடிகர் கவுண்டமணியுடன் நடிக்க வேண்டும் என ஆசை இருக்கும் .இதே ஆசை தான் நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் நீண்ட நாட்களாக இருந்து வந்தது.

- Advertisement -

இது குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் நேரடியாக கவுண்டமணியிடம் பலமுறை கேட்டு நடிக்க அழைத்ததாகவும், ஆனால் அந்த வாய்ப்பை கவுண்டமணி மறுத்துவிட்டதாகவும் சிவகார்த்திகேயன் பேட்டி ஒன்றில் கூறினார். இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் கனவு தற்போது மீண்டும் நிஜமாக உள்ளது. தனது படத்தில் கவுண்டமணிக்காக ஒரு பிரத்தியேக கேரக்டரை சிவகார்த்திகேயன் உருவாக்கி, நடிகர் கவுண்டமணியை அதில் நடிக்க அணுகியுள்ளார். இதற்கு நடிகர் கவுண்டமணி சில கண்டிஷனை போட்டுள்ளார்.

அதாவது ஹீரோவை துதி பாடும் வசனங்கள் இருக்கக் கூடாது. படத்தில் தமக்கு உரிய வெயிட்டேஜ் இருக்க வேண்டும். மற்ற கதாபாத்திரங்களை கலாய்க்கும் வகையில் வசனங்கள் இருக்க வேண்டும் உள்ளிட்ட கண்டிஷனை கவுண்டமணி போட்டுள்ளார். இதற்கு சிவகார்த்திகேயன் ஓகே சொல்ல இருவரும் இணைவது சாத்தியமாகி உள்ளது. படம் முழுவதும் கவுண்டமணி வருவது போல் சிவகார்த்திகேயனுக்கு பெரியப்பாவாக கவுண்டமணி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

- Advertisement -

ஏற்கனவே வருத்தப்படாத வாலிபர் சங்கம், பிரின்ஸ் படங்களில் நடிகர் சிவகார்த்திகேயனோடு சத்யராஜ் இணைந்துள்ளார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் கவுண்டமணி நடிக்கும் படத்தில் சத்யராஜ் இணைந்தால் அந்த கூட்டணி மாபெரும் வெற்றியை பெரும் என்பதால் சத்யராஜையும் சேர்க்க ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சிவகார்த்திகேயன், கவுண்டமணி, சத்யராஜ் ஆகியோர் 49 ஓ திரைப்படத்தில் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்றனர்.

- Advertisement -

அப்போது மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் கவுண்டமணியும் சத்யராஜும் இணைந்து படம் நடிக்க வேண்டும், முடிந்தால் அந்த படத்தில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். கவுண்டமணியின் காமெடியை வைத்து தான் இங்கு பலரும் நகைச்சுவையை தயாரித்து வருவதாக சிவகார்த்திகேயன் அந்த நிகழ்ச்சியில் பேசினார் .ஏழு ஆண்டுகளுக்கு முன்பு சிவகார்த்திகேயன் விடுத்த கோரிக்கை தற்போது நிஜமாக உள்ளது.

Most Popular