Sunday, May 19, 2024
- Advertisement -
HomeUncategorizedகமலின் நம்பர் 1 ரசிகன் யார்? கெளதம் மேனன், லோகேஷ் இடையே நெகிழ்ச்சி விவாதம்

கமலின் நம்பர் 1 ரசிகன் யார்? கெளதம் மேனன், லோகேஷ் இடையே நெகிழ்ச்சி விவாதம்

தமிழ் சினிமாவில் காலத்தால் அழிக்க முடியாத இடத்தை பெற்றிருப்பவர் என்றால் அது நடிகர் கமல்ஹாசன் தான். கமலின் பல படங்கள் பல இயக்குனர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்திருக்கிறது.

- Advertisement -

கமலின் தேவர் மகன் திரைப்படம் உதவி இயக்குனர்களுக்கு ஒரு பல்கலைக்கழகம் போல் இருந்ததாக எஸ் ஜே சூர்யா கூறியிருந்தார். கமல்ஹாசன் செய்த சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்த நிலையில் நடிகர் கமலின் நம்பர் ஒன் ரசிகர் யார் என்று திரைப்பட இயக்குனர்களுக்கு இடையே அண்மையில் காரசாரமான விவாதம் ஏற்பட்டது. லோகேஷ் கனகராஜ் கமல் மீதான பற்றாலே சினிமாவுக்கு வந்தார். கமலின் தீவிரமான ரசிகரான அவர் அவருடைய அனைத்து படங்களிலும் கமலின் சாயல்களை தனது ஹீரோவுக்கு வைத்திருப்பார்.

- Advertisement -

அப்படி கமல்ஹாசனை வைத்து அவர் எடுத்த விக்ரம் திரைப்படம் மாபெரும் ஹிட் பெற்றது. நிலைமை இப்படி இருக்க ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் மணிகண்டன் கமலின் தீவிர ரசிகர் நான் தான் என்றும் லோகேஷ் கனகராஜ்  விட நான் தான் நம்பர் ஒன் ரசிகர் இந்த இடத்திற்கு நான் யாரையும் விடமாட்டேன் என்று கூறினார்.

- Advertisement -

இதற்கு அந்த நிகழ்ச்சியில் பதில் அளித்த லோகேஷ் கனகராஜ் அந்த இடத்தை நானும் விட்டுக் கொடுக்க மாட்டேன். சட்டைக்கிழியும் அளவுக்கு சண்டை வரும் என்றும் லோகேஷ் கனகராஜ் பதில் அளித்து இருந்தார். இதுக்கெல்லாம் முன்பாக ஏற்கனவே கௌதம் மேனன் பேசுகையில் கமல் சாரின் முதல் ரசிகன் நான் தான் என்றும் பேசியிருந்தார்.

இந்த நிலையில் வேட்டையாடு விளையாடு திரைப்படம் தற்போது மீண்டும் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.பலரும் இந்த படத்தை பாராட்டி வருகிறார்கள். ஒரு ரசிகர் ஒருவர் கமலின் தீவிர ரசிகர் கௌதம் மேனன் தான் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு லோகேஷ் கனகராஜ் உண்மையில் ஜீவிஎம் தான் கமலின் தீவிர ரசிகர் எப்போதும் என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த கௌதம் மேனன், நான் கமல் சாரின் முதல் ரசிகன் என்ற பெயரை வைத்திருந்தேன். ஆனால் நாயகன் மீண்டும் வரார் என்று நீங்கள் எடுத்த விக்ரம் திரைப்படம் மூலம் அந்த இடத்தை நான் இழந்து விட்டேன்.

மீண்டும் உங்களுடன் போட்டி போட நான் விரும்புகிறேன். என்னையும் நான் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் இந்த சண்டையில் சட்டை கிழியாது. அன்பு மட்டும்தான் என்று கெளதம் மேனன் பதில் அளித்துள்ளார். இந்த பேச்சு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Most Popular