Friday, April 26, 2024
- Advertisement -
HomeUncategorizedராமர் கோவிலைப் பற்றி கேட்டவுடன் தப்பி ஓடிய யோகி பாபு ..! நடந்தது என்ன?

ராமர் கோவிலைப் பற்றி கேட்டவுடன் தப்பி ஓடிய யோகி பாபு ..! நடந்தது என்ன?

சமீபத்தில் கோவிலுக்கு வந்த நடிகர் யோகி பாபு விடம் பத்திரிக்கையாளர்கள் பேட்டி எடுக்க தொடங்கி விட்டார்கள். அதில் அவர் பேசிய ஒரு செய்தி தற்பொழுது வைரலாகி வருகிறது.

- Advertisement -

தற்பொழுது எல்லாம் நீங்கள் எந்த சினிமா நிகழ்ச்சிக்கும் வருவதில்லை அதன் காரணம் என்ன என்று பத்திரிக்கையாளர்கள் நடிகர் யோகி பாபு விடம் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு அவர் எனக்கு இரவும், பகலும் படப்பிடிப்பு இருக்கிறது அதன் காரணத்தினால் தான் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை அந்தத் திரைப்படத்தின் இயக்குனர்களை கேட்டாலே அவர்கள் அதற்கான விளக்கத்தை தருவார்கள் என்று கூறினார்.

- Advertisement -

மேலும் பத்திரிக்கையாளர்கள் யோகி பாபுவிடம் தூக்குதுரை திரைப்படத்தில் நீங்கள் கதாநாயகன் தானே அதனுடைய நிகழ்ச்சிகளும் ஏன் பங்கு கொள்ளவில்லை .கேப்டனின் நினைவிடத்திற்கு வந்து விட்டு சென்று விட்டீர்களே ஏன் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பினார்கள் .

- Advertisement -

அதற்காக பத்திரிகையாளரை பார்த்து நீ சாப்பிடுகின்ற சாப்பாட்டிற்கு ஏத்தது போன்று கரெக்டாக யோசித்து கேள்வி கேள் என்று பத்திரிக்கையாளருக்கு அறிவுரை கூறிய விட்டு பின் அந்த கேள்விக்கு தூக்கு துரை திரைப்படத்தில் நான் ஒரு ஆறு நாட்கள் நடித்திருக்கிறேன்.

முதல் பாதியில் தான் நான் வருவேன் மத்தபடி அந்தத் திரைப்படத்தின் கதாநாயகன் மகேஷ் தான் என்று பதிலளித்தார்  நடிகர் யோகி பாபு.
மேலும் கேப்டனை நினைவிடத்திற்கு வந்துவிட்டு நான் விமானம் ஏறி அடுத்த திரைப்படத்தின் உடைய படப்பிடிப்புக்காக சென்று விட்டேன் வேறு எதுவும் இல்லை என்றும் பதிலளித்தார்.

இதுபோன்ற நிறைய திரைப்படங்களில் உங்களையே ஹீரோ என்பது போல் விளம்பரம் செய்கிறார்களே அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார்கள்

அதற்கு நடிகர் யோகி பாபு நானும் எவ்வளவோ முறை கூறி இருக்கிறேன் ஆனால் அவர்கள் கேட்பதில்லை. இதுபோன்று நிறைய திரைப்படங்களில் நான் சாதாரண கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் ஆனால் என்னை ஹீரோ போன்று விளம்பரம் செய்கிறார்கள் அதற்கு நான் பொறுப்பல்ல என்று கூறினார் நடிகர் யோகி பாபு.

கடைசியாக ராமர் கோவிலுக்கு அழைப்பு வந்ததைப் பற்றி என்று பத்திரிகையாளர்கள் கேள்வியை தொடங்கும் பொழுது யோகி பாபு நன்றி சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு சாமர்த்தியமாக நகர்ந்து சென்று விட்டார் இந்த வீடியோ பேஸ்புக் ,எக்ஸ் போன்ற பக்கங்களில் பரவி வருகிறது.

Most Popular