Sunday, April 28, 2024
- Advertisement -
HomeUncategorizedஅனிமல் திரைப்படத்தில் இயக்குனர் மீது தவறு இல்லை..! நடிகை குஷ்புவின் விமர்சனத்தால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்..!

அனிமல் திரைப்படத்தில் இயக்குனர் மீது தவறு இல்லை..! நடிகை குஷ்புவின் விமர்சனத்தால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்..!

தெலுங்கு திரைப்பட இயக்குனரான சந்தீப் ரெட்டி வாங்க இயக்கத்தில் நடிகர் ரன்பீர் கபூர் ,ராஷ்மிகா மந்தானாவும் இணைந்து நடித்த அனிமல் திரைப்படம் வசூல் ரீதியாக 900 கோடி ரூபாய் வரை வசூலை பெற்றது .ஆனால் விமர்சன ரீதியாக பாரபட்சமின்றி பார்ப்பவர்கள் மோசமாக விமர்சித்து தள்ளி விட்டார்கள்.

- Advertisement -

பெண்களை கண்ணியப்படுத்தாமல், அதிக வன்முறை, ஆபாசம் என்று ஒரு திரைப்படம் எப்படியெல்லாம் இருக்கக் கூடாது அது எல்லா விதத்திலும் அமைந்திருந்த அனிமல் திரைப்பட ரசிகர்கள் விமர்சித்தாலும் மற்ற திரைப்படத்திற்கு 6 flimfare அவார்ட்ஸ் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சந்திப் ரெட்டி பங்காவிற்கு சாதா சாங் விருதுகளும் கிடைத்தது அதிர்ச்சி அளித்திருக்கிறது.

இத்திரைப்படத்தை பல பிரபலங்களும் மோசமாக விமர்சித்ததும் குறிப்பிடத்தக்கது. பிரபல நடிகை ராதிகா திரைப்படத்தை பார்த்துவிட்டு. திரைப்படத்தின் பெயர் குறிப்பிடாமல். இந்தப் படத்தைப் பார்த்து வாந்தியை வந்துவிட்டது என்று கூறியிருந்தார். அதேபோல் பாடகர் ஸ்ரீனிவாசனும்  விலங்குகளுக்காக எடுக்கப்பட்டது தான் அனிமல் திரைப்படம் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

இதுபோல் பல பிரபலங்கள் தங்கள் விமர்சனங்களை அனிமல் திரைப்படத்திற்கு தெரிவித்து வந்த நிலையில் தற்போது பிரபல நடிகை குஷ்பூ திரைப்படத்தை விமர்சித்தது தற்பொழுது வைரல் ஆகி வருகிறது .நான் இதுவரை அனிமல் திரைப்படம் பார்க்க வில்லை .ஆனால் நான் திருமணத்திற்கு பின் ஏற்படும் பாலியல் வன்கொடுமையையும், முத்தலாக்கையும் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக இருந்து பார்த்திருக்கிறேன்.

- Advertisement -

அனிமல் போன்ற ஒரு மோசமான திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் இந்த அளவிற்கு வசூலை குவிக்கிறது என்றால் தவறு எங்கு இருக்கிறது. நான் இயக்குனரை குறை சொல்லவில்லை அந்த திரைப்படங்களை பார்க்க விரும்பும் ரசிகர்களின் இதுதான் தவறிருக்கிறது. என்னுடைய மகள்கள் இதுபோன்ற திரைப்படம் பார்ப்பதை நான் விரும்பவில்லை .ஆனால் எதேர்ச்சியாக இந்த திரைப்படத்தை அவர்கள் பார்த்துவிட்டு என்னை தயவு செய்து இந்த  திரைப்படத்தை பார்க்க வேண்டாம் என்று எச்சரித்தார்கள் .

அதற்கு பிறகும் நான் அதை பார்ப்பது நல்லதல்ல. அதேபோல் தான் இத்திரைப்படத்தின் விமர்சனம் ஓரளவு தெரிந்த பின்னும் அது தொடர்ந்து ரசிகர்கள் பார்த்ததால் தான் இந்த அளவிற்கு திரைப்படம் வெற்றியடைந்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி பேசி இருந்தார் நடிகை குஷ்பூ.

பெண்களின் கவுரவத்தை நிலை நாட்ட வேண்டும் என்றெல்லாம் பேசும் பட்சத்தில் இதுபோன்ற திரைப்படங்கள் வெற்றியடைவதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று நடிகை குஷ்பூ அனிமல் திரைப்படத்தைப் பற்றி விமர்சித்திருக்கிறார்.

Most Popular