Friday, May 3, 2024
- Advertisement -
Homeசினிமாபொன்னியின் செல்வன், துணிவு பல கோடி வருமானம் என செய்தி..! லைகா நிறுவனத்தில் வருமான வரித்துறை...

பொன்னியின் செல்வன், துணிவு பல கோடி வருமானம் என செய்தி..! லைகா நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை

தமிழ் சினிமாவில் தற்போது மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமாக இருப்பது லைக்காக தான். லைக்கா கையில் தான் தற்போது பல்வேறு நடிகர்களின் கால்ஷீட் இருக்கிறது. மிகப் பெரிய நட்சத்திரங்கள் எல்லாம் லைக்கா படத்தை தான் நடிக்கிறார்கள். தயாரிப்பு பணியை மட்டும் லைக்கா செய்யாமல் விநியோஸ்தரர் பணிகளும் லைக்கா செய்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் துணிவு திரைப்படத்தை வெளிநாட்டில் வாங்கி அதனை லைக்கா நிறுவனம் விற்றது. எப்போதுமே அஜித் படம் வெளிநாட்டில் அதிகபட்சமாக 20-30 கோடி ரூபாய் வரை தான் வசூல் கிடைக்கும்.

- Advertisement -

ஆனால் லைக்கா நிறுவனம் வாங்கி விற்ற துணிவு திரைப்படத்திற்கு 60 முதல் 70 கோடி ரூபாய் வருமானம் கிடைத்ததாக செய்திகள் வெளியானது.இதனை லைக்கா நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

- Advertisement -

மேலும் துணிவு திரைப்படம் மொத்தமாகவே 190 கோடி ரூபாய் தான் வசூல் செய்த நிலையில்,போலி விளம்பரம் காரணமாக துணிவு 330 கோடி ரூபாய் வசூல் செய்ததாக பல்வேறு செய்திகள் வெளியானது.

இதனால் பல கோடி ரூபாய் கருப்பு பணம் வெள்ளை பணமாக மாற்ற முயற்சிகள் நடந்திருப்பதாக புகார் கூறப்பட்டது. இதேபோன்று பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் பகுதி 500 கோடி ரூபாய்க்கும், மேலும் இரண்டாவது பகுதி 300 கோடி வசூல் செய்ததாக லைகா நிறுவனமே அறிவித்தது.
இதனால் லைக்கா நிறுவனம் பல மோசடிகளில் ஈடுபட்டு இருப்பதாக புகார் எழுந்தது .

இதனை அடுத்து வருமானவரித்துறை மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆகியோர் லைகா நிறுவனத்திற்கு சொந்தமான பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள். இது தமிழ் சினிமாவில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சோதனை காரணமாக நடிகர் அஜித்தின் புதிய திரைப்படமும் தள்ளி போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Most Popular