Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமாநெல்சன் செய்த சம்பவம்.. ஜெய்லரால் ரஜினி, கலாநிதி மகிழ்ச்சி

நெல்சன் செய்த சம்பவம்.. ஜெய்லரால் ரஜினி, கலாநிதி மகிழ்ச்சி

- Advertisement -

நடப்பாண்டில் தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று ஜெய்லர். இதில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மோகன்லால் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்த வருகிறார்கள். அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால் ஜெயிலர் படத்தை ஹிட் ஆக்க வேண்டிய கட்டாயத்தில் நடிகர் ரஜினி இருக்கிறார்.

முதலில் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி படத்தை முடிக்க முடியுமா என தயாரிப்பு நிறுவனத்திற்கு சந்தேகம் இருந்தது. இதனால் படத்தை தீபாவளி அன்று ரிலீஸ் செய்ய மாற்றுத்திட்டம் வைக்கப்பட்டது.

- Advertisement -

ரஜினி படம் தனியாக வந்தால்தான் எதிர்பார்த்த வசூலை பெற முடியும். சூர்யா அல்லது கமல் திரைப்படத்துடன் இணைந்து வந்தால் படத்தின் வசூல் பாதிக்கப்படும். இதனால் கலக்கத்தில் தயாரிப்பு நிறுவனம் இருந்தது. ஆனால் இயக்குனர் நெல்சன் யாரும் எதிர்பார்க்காத வகையில் படத்தை முன்கூட்டியே எடுத்து முடித்து விட்டார்.

- Advertisement -

படத்தின் முக்கியமான சண்டை காட்சிகள் அனைத்தையும் கச்சிதமாக முடித்து விட்டாராம். இன்னும் பத்து நாட்கள் தான் சூட்டிங் இருக்கிறதாம். இதனால் ஏப்ரல் 15ஆம் தேதி படத்தின் ஷூட்டிங் நிறைவு செய்ய நெல்சன் திட்டமிட்டுள்ளார். இதனால் எதிர்பார்த்தபடி ஜெய்லர் படம் ஆகஸ்ட் 11ஆம் தேதியே ரிலீஸ் ஆகும் என தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் மகிழ்ச்சியில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கலாநிதி மாறன் இயக்குனர் நெல்சனை அழைத்து பாராட்டி இருக்கிறார்கள். தற்போது லால் சலாம் படப்பிடிப்பின் காட்சிகள் விழுப்புரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் ரஜினிகாந்த் ஏப்ரல் மாத இறுதியில் கலந்து கொண்டு ஒரு மாதம் கால்சீட் கொடுத்திருக்கிறார். அந்தப் படம் முடிந்த பிறகு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் ஜெய் பீம் இயக்குனருடன் இணைந்து தனது புதிய படத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார்.

Most Popular