Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசினிமாகெக்க பெக்க னு சிரிச்சு பேமெண்ட வாங்கி, பேக்ல போட்டுட்டு, போயிட்டே இருக்கணும் - ஸ்ருதிகாவை...

கெக்க பெக்க னு சிரிச்சு பேமெண்ட வாங்கி, பேக்ல போட்டுட்டு, போயிட்டே இருக்கணும் – ஸ்ருதிகாவை வார்த்தையில் பழிவாங்கிய ஜனனி !

கலக்கப்போவது யாரு சீசன் 4ல் நடுவராக பணியாற்றும் சுருதிஹாவை பார்த்து பிக்பாஸ் ஆறாவது சீசனில் கலந்து கொண்ட ஜனனி பேசிய விதம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது. மேலும் ஜனனி மற்றும் அமுதவாணன் இருவருக்கும் இடையேயான உறவில் நீடிக்கும் சர்ச்சை தொடர்கிறது.

- Advertisement -

தமிழ் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் எனும் ரியாலிட்டி ஷோ மக்கள் மனதில் அதிகம் இடம் பிடித்த ஒன்றாகும். இந்தத் தொடரின் ஆறாவது சீசன் ஒரு மதங்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டாலும் இறுதியில் அஷீம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

இந்த நிகழ்ச்சியில் இலங்கையைச் சார்ந்த ஜனனி எனும் பெண் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். சீக்கிரமாகவே அவருக்காக ஒரு ரசிகர்கள் ஆர்மியும் உருவாக்கினார். நடிகை திரிஷாவின் தீவிர ரசிகையான ஜனனி, அவரைப் போலவே தானும் மீடியா துறையில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக கொண்டவர். ஆனால் அவர் எதிர்பார்த்தது போல அந்த பிக் பாஸ் நிகழ்ச்சி அவருக்கு அந்த வாய்ப்பை வழங்கவில்லை அவருக்கு அந்த நிகழ்ச்சியின் மூலம் பல சர்ச்சைகள் தரும் நிகழ்வுகள் நடைபெற்று அரங்கேறின.

- Advertisement -

மைக் இல்லாமல் அமுதவாணனுடன் உரையாடிய பிறகு முதல் முறையாக அவர் கடும் விமர்சனத்திற்கு ஆளானார். குழுவினரிடையே வாதத்தில் ஈடுபட்டதன் மூலம் பிக் பாஸ் விதிமுறைகளை மீறியதற்காக இருவரும் அடிக்கடி ஆன்லைன் ரசிகர்களின் கோபத்திற்கும் ஆளானார். அந்த சூழ்நிலையில் வெற்றி பெறும் போட்டியாளர்களில் ஒருவராக கணிக்கப்பட்ட ஜனனி, வெகு விரைவிலே அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு அந்த நிகழ்ச்சியின் மற்றொரு போட்டி ஆளான அமுதவாணணிடம் அவர் காட்டிய நெருக்கமே என்று கூறப்பட்டது.மேலும் அமுதவாணனின் மனைவியும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் போது இவர்கள் இருவரின் உறவில் சந்தேகம் இருப்பதாக கூறியது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -

இதற்கிடையில் அதே சேனலில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு சீசன் நான்கில் அமுதவாணன் ஜனனி மற்றும் பலர் கலந்து கொண்டனர் இதில் நடுவராக பிக் பாஸ் தொடரில் கலந்து கொண்ட ஸ்ருதிகாவும் ஒருவர், அவர் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது அமுதவாணனிடம், நீ ஜனனியை காதலிக்கிறாயா? என்று கேட்டதற்கு அமுதவாணன் எந்த பதிலும் கூறவில்லை.

இதனால் இந்த வாரம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜனனி அது பற்றி பேசியுள்ளார் . அவர் அது பற்றி பேசும் போது ” எனது கட்சிக்காரரான அமுதவாணனிடம் நீ ஜனனியை காதலிக்கிறாயா என்று கேட்டதற்கு? பதில் கூறும் வகையில் இந்த நிகழ்ச்சியில் ஜனனி ஸ்ருதிஹாவை பார்த்து “வந்தோமா நடுவர் பணியை செய்தோமா! பேமெண்ட் வாங்கணுமா? போனோமா!என்று இருக்காமல் எதற்கு இந்த மாதிரி கிராஸ் கேள்வி எல்லாம் கேட்டுக்கிட்டு என்று சொல்ல, சுருதிஹாவும் தெரியாம சொல்லிவிட்டேன் என்று கூறினார்.

இதனால் அமுதவாணன் மற்றும் ஜனனி இருவருக்கும் இடையேயான உறவில் இருக்கும் அந்த மறைமுகம் மேலும் ஒரு படி உயர்ந்து உள்ளது.

Most Popular