சினிமா

சைரன் படத்திற்காக அஜித் போல் மாறிய ஜெயம் ரவி

தமிழ் சினிமாவில் தற்போது பிஸியான நடிகராக சுழன்று வருகிறார் ஜெயம் ரவி. பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காக பலப்பட வாய்ப்புகளை ஜெயம் ரவி தியாகம் செய்தார். அவருடைய மெகா ஹிட் திரைப்படம் ஆன தனி ஒருவன் 2 படத்தின் இரண்டாவது பாகத்தை பொன்னியின் செல்வதற்காக ஜெயம் ரவி தள்ளி வைத்துள்ளார்.

Advertisement

மேலும் அவர் நடித்த பட படங்களும் தாமதமானதால் அவருடைய மார்க்கெட் கொஞ்சம் ஆட்டம் கண்டது. எனினும் பொன்னியின் செல்வன் வெற்றி அவருக்கு தனி பெயரை பெற்று தந்துள்ளது. இதன் மூலம் ஜெயம் ரவி தற்போது அடுத்தடுத்த படங்களை நடித்து வருகிறார். வரும் மார்ச் 10 ஆம் தேதி பல நாட்கள் திரைக்கு வராமல் காத்திருந்த அகிலன் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. இதனை தொடர்ந்து பொன்னியின் செல்வன் திரைப்படம் ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு வருகிறது.

அதன் பிறகு மே மாதம் இறுதியில் ஜெயம் ரவி நடித்துள்ள இறைவன் திரைப்படமும் ரிலீஸ் ஆக உள்ளது. இதனால் மூன்று மாதத்தில் மூன்று ஜெயம் ரவி படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வருகின்றன. இந்த நிலையில் தன்னுடைய அடுத்த திரைப்படத்திற்கான ஜெயம் ரவி தன்னுடைய லுக்கை தலைக்கீழ் மாற்றி உள்ளார். ஜெயம் ரவிக்கு சாக்லேட் பாய் கேரக்டரும் ,ரக்டுபாய் கேரக்டரும் அசால்ட்டாக பொருந்தும். பூலோகம் போன்ற படங்களில் எல்லாம் குப்பத்து ஆளாகவே ஜெயம் ரவி மாறி இருப்பார். இந்த நிலையில் சைரன் படத்திற்காக ஜெயம் ரவி போட்டுள்ள கெட்டப் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

Advertisement

நடிகர் அஜித் வேதாளம் படத்தில் வருவது போல் ஜெயம் ரவி தன்னுடைய லுக்கை மாற்றி இருக்கிறார். சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் அவர் தனது புதிய லுக்கில் வந்தார். இதனை பார்த்ததும் ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர். மேலும் ஜெயம் ரவி சினிமாவுக்கு வந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகிறது.ஆனால் நமது மனதில் இளம் வீரராகவே இன்னும் அவர் இருக்கிறார். தற்போது இந்த கெட்டப்பை பார்க்கும் போது தான் ஜெயம் ரவிக்கும் வயதாகிவிட்டது என்பது நம் மூளைக்கு எட்டுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top