Friday, April 19, 2024
- Advertisement -
Homeசினிமாஜெயம் ரவிக்கு அடிச்ச ஜாக்பாட்.. ஏஆர் ரஹ்மானும் இணைகிறார்

ஜெயம் ரவிக்கு அடிச்ச ஜாக்பாட்.. ஏஆர் ரஹ்மானும் இணைகிறார்

- Advertisement -

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் ஜெயம் ரவியின் மார்க்கெட் எகிறியதாக நம்பப்பட்டது.  அந்தப் படத்தில் ராஜராஜ சோழனாக நடித்த ஜெயம் ரவி ரசிகர்கள் மனதை கவரும் வகையில் கம்பீரமாக இருந்தார். எனினும் இந்தப் படத்திற்கு பிறகு கடந்த மார்ச் மாதம் பத்தாம் தேதி வெளியான அகிலன் திரைப்படம் படுதோல்வியை தழுவியது.

தமிழகத்தில் ஒட்டுமொத்தமாகவே 7 கோடி ரூபாய் தான் அந்த படம் வசூலை பெற்றது. இதனால் ஜெயம் ரவி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் அவர்களை குஷிப்படுத்தும் விதமாக ஒரு செய்தி தற்போது வெளிவந்துள்ளது. பொதுவாக ஒரு ஹீரோவின் மார்க்கெட்டை வைத்து தான் படத்திற்கான பட்ஜெட் ஒதுக்கப்பட்டு படம் தயாரிக்கப்படும்.

- Advertisement -

ஆனால் சமீப காலமாக படத்தின் கதையை நம்பி பட்ஜெட்டை தயாரிப்பாளர்கள் அதிகரிக்கிறார்கள். எடுத்துக்காட்டாக சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ஒட்டுமொத்தமாகவே 60 கோடி ரூபாய் வசூலை தான் பெற்றது. ஆனால் தற்போது சூர்யாவின் 42வது திரைப்படம் 200 கோடி ரூபாய்க்கு மேல் பட்ஜெட் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

இதேபோன்று நடிகர் சிம்புவின் புதிய திரைப்படத்திற்கு 100 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது ஜெயம் ரவியும் இணைந்து இருக்கிறார். வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் ஒரு மாபெரும் வரலாற்றுப் படத்தை எடுக்க உள்ளது.  இதற்காக 100 கோடி பட்ஜெட்டை ஒதுக்கி ஜெயம் ரவியை ஹீரோவாக முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

இதில் ஏ ஆர் ரகுமான் இசையமைக்க தயாரிப்பு நிறுவனம் அவரை ஒப்பந்தம் செய்திருக்கிறது. இந்த படத்தின் இயக்குனர் யார் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. ஜெயம் ரவி தனியாக நடித்த படத்தில் அதிக பட்ஜெட் கொண்டது இதுவாக தான் இருக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Most Popular