Sunday, May 5, 2024
- Advertisement -
Homeசினிமாசீதையாக நடிக்க அசைவ உணவை நிறுத்திய பாலிவுட் நடிகை

சீதையாக நடிக்க அசைவ உணவை நிறுத்திய பாலிவுட் நடிகை

இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ஆதி புருஷ்  3டி திரைப்படம் ஆ பேன் இந்தியன் மொழிகளில் வெளியிடப்பட உள்ளது. கடந்த ஜனவரி மாதம் இந்த திரைப்படத்தின் உடைய டீசர் வெளியானது. கிராபிக்ஸ் கேலிச்சித்திரம் போல் இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வந்தார்கள்.

- Advertisement -

இதனால் விழித்துக் கொண்ட பட குழுவினர்கள் குறித்த தேதியில் இருந்து திரைப்படத்தை வெளியிடாமல் பல மாற்றங்களை செய்து மீண்டும் சிறப்பான முறையில் இந்த திரைப்படத்தின் டீசரை வெளியிட்டார்கள். ஆரம்பத்தில் கேலி செய்த ரசிகர்கள் திரைப்படத்தை பார்ப்பதற்கு மிகுந்த ஆர்வத்தில் இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த திரைப்படத்தின் மீது ஆர்வம் ஏற்படுவதற்கு இன்னும் ஒரு காரணம் என்னவென்றால் பாகுபலி திரைப்படத்தின் பிரம்மாண்ட நாயகனாக நடித்த நடிகர் பிரபாஸ். இந்த திரைப்படத்தின் ராமனாக நடிக்கிறார் என்பதே ஆகும்.
மேலும் இந்த திரைப்படத்தின் சீதையாக கீர்த்தி சனம்,ராவணனாக சைப் அலிகான் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

- Advertisement -

இதில் சீதையாக நடித்திருக்கும் கீர்த்தி கடந்த 2021 ஆம் ஆண்டு பாலிவுடில் வெளியான மீமி என்ற திரைப்படத்தில் நடித்த கதாநாயகி ஆவார்.இதற்கு முன்னும் இவர் நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.ஆனால் இந்தத் திரைப்படத்தில் இசைக்குயில் ஏ ஆர் ரகுமானின் இசையில் பரம சுந்தரி என்ற ஒரு பாடல் வெளிவந்து இணையத்தை பாடலின் நடனமாடிய நடிகைதான் இந்த கீர்த்தி சனோன்.

தற்பொழுது நடித்திருக்கும் ஆதிபுருஷ் திரைப்படத்தைப் பற்றி ஒரு பேட்டியில் விஷயங்களைப் பற்றி கூறியிருந்தார். அலியா பட், தீபிகா படுகோன் போன்ற முன்னணி நடிகைகளுக்கு பிறகு தான் எனக்கு இந்த திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

எந்த ஒரு நடிகையாக இருந்தாலும் எப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்தாலும் அது பெருமை அல்ல. இது போன்ற கதாபாத்திரங்களில் நடிப்பது தான் பெருமை.எனக்கு அந்த பாக்கியம் கிடைத்திருக்கிறது.

அந்த கதாபாத்திரத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் அந்த படப்பிடிப்பின் போது சீதையாக நடிக்க வேண்டும் என்ற நாட்களில் எல்லாம் நான் அசைவம் சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்த்து இருந்தேன்.

மேலும் நான் நடிக்க நடிக்க எனக்கு சீதையின் மீது ஒரு நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டதுடன் நான் நிஜ வாழ்விலும் சீதையாக வாழ வேண்டும் என்பதற்காக நிறைய புத்தகங்களை தேடி படித்து வருகிறேன் என்றும் கூறியிருந்தார் நடிகை கீர்த்தி சனோன்.

Most Popular