சினிமா

கதை திருட்டு சர்ச்சையில் சிக்கிய ரஜினி மகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மூன்று என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் கால் எடுத்து வைத்தார். தன்னுடைய கணவரான தனுசையே கதாநாயகனாக வைத்து அத்திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

Advertisement

3 திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று தந்தது .இதைத் தொடர்ந்து கௌதம் கார்த்திக்கை கதாநாயகனாக வைத்து வை ராஜா வை என்று திரைப்படத்தையும் இவர் இயக்கியிருக்கிறார்.

இது இரண்டு திரைப்படங்களுக்குப் பிறகு வேறு எந்த திரைப்படங்கள் இயக்குவதிலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆர்வம் காட்டவில்லை. தற்பொழுது இவருடைய சொந்த வாழ்வில் எதிர்பாராத விதமாக தன் கணவரான தனுஷோடு விவாகரத்து ஆகிவிட்டது.

Advertisement

திருமண வாழ்வில் இருந்து வெளிவந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்பொழுது மீண்டும் சினிமாவில் ஆர்வம் காட்டத் தொடங்கி இருக்கிறார்.

தற்பொழுது விஸ்னு விஷால் மற்றும் விக்ராந்தை முக்கிய கதாபாத்திரமாக வைத்து லால் சலாம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் தன்னுட தந்தையும் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு சிறிய முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவையெல்லாம் ஒரு புறம் நடந்து கொண்டிருக்கும் இந்த சமயத்தில் தற்பொழுது இது திரைப்படத்தின் மீது ஒரு சர்ச்சை ஏற்பட்டு இருக்கிறது. இங்கு திரைப்படத்தின் கதை திருடப்பட்டு எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இயக்குனர் பாலு மகேந்திராவின் துணை இயக்குனராக பணியாற்றிய மோகன் என்பவர் கடந்த ஆண்டு லைக்கா நிறுவனத்திற்கு ஒரு கதையை அனுப்பி இருக்கிறார்.

Advertisement

அந்த கதை முற்றிலும் கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது ஆகும்.அந்தக் கதை ஏதோ ஒரு காரணங்களால் மோகன் இயக்கப்படாமல் தடையானது

அதைத்தான் தற்பொழுது இயக்குனராக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முற்றிலுமாக அதை கிரிக்கெட் சம்பந்தப்பட்ட படமாக மாற்றி இயக்கிக் கொண்டிருக்கிறார் என்ற சர்ச்சை தற்பொழுது வெளியாகி இருக்கிறது.

ஆனால் இதை அறிந்த ஐஸ்வர்யா ரஜனிகாந்த் அந்த கதையை முற்றிலுமாக படித்துவிட்டு என்னுடைய லால் சலாம் திரைப்படத்திற்கும் துணை இயக்குனர் மோகனின் கதைக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்று கூறியிருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கும் திரைப்படங்களை திருட்டு கதை என்று கூறி சர்ச்சைக்கு உள்ளாக்கியது ரசிகர்களிடம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா துணை இயக்குனர் மோகன் தந்த கதையை பற்றியும் ஐஸ்வர்யா ரஜினி காந்த் இயக்கிக் கொண்டிருக்கும் லால் சலாம் திரைப்படத்தைப் பற்றியும் எந்த கருத்தும் கூறவில்லை.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top