Wednesday, May 1, 2024
- Advertisement -
HomeUncategorized“ஐஸ்வர்யா ராயை அதிக திரைப்படங்களில் நடிக்க அனுமதித்து குழந்தையை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் ” -...

“ஐஸ்வர்யா ராயை அதிக திரைப்படங்களில் நடிக்க அனுமதித்து குழந்தையை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் ” – ரசிகரின் கேள்விக்கு கணவர் அபிஷேக் பச்சனின் பதில்

இயக்குனர் மணிரத்தினம் இயக்கி, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த திரைப்படம் பொன்னியின் செல்வன் பாகம் 2. எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இந்த படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி வெற்றி பெற்றது இந்த படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் உலக அழகியின் ஐஸ்வர்யா ராய். அவரின் நடிப்பு குறித்து ரசிகர்கள் கூறிய பதிலுக்கு அவரது கணவர் அபிஷேக் பச்சன் பதில் அளித்துள்ளார்.

- Advertisement -

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டு பாகங்களிலும் குறிப்பிடத்தக்க அளவில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தால் நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் நடித்திருந்த நந்தினி கதாபாத்திரம் இவருக்கு மிகவும் பொருந்தி இருந்தது. இதனால் இவர் மீது ரசிகர்கள் அனைவரும் அளவு கடந்த அன்பை வெளிப்படுத்தினார்கள்.

இந்த திரைப்படத்தை பார்த்த அபிஷேக் பச்சன் இந்த படத்தை பற்றி ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். மேலும் நடிகை ஐஸ்வர்யாராயின் நடிப்பை பாராட்டி இருந்தார். அந்தப் பதிவில் ரசிகர் ஒருவர் ஐஸ்வர்யா ராயை தொடர்ந்து நடிக்க அனுமதியுங்கள் என்று கேட்ட கேள்விக்கு, ரசிகர்கள் சந்தோஷப்படும் அளவிற்கு பதிலளித்துள்ளார் நடிகர் அபிஷேக் பச்சன்.

- Advertisement -

ட்விட்டரில் அபிஷேக் பச்சன் கூறியிருப்பது “ பொன்னியின் செல்வனின் இரண்டாவது பாகம் மிகவும் அற்புதம்! இப்போது எனது வார்த்தைகளுக்கு நஷ்டம். அதனால் அன்பு நிரம்பி வழிந்தது. இயக்குனர் மற்றும் மற்ற நடிகர்கள் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துக்கள். அதனால், திருமதி. ஐஸ்வர்யா ராயை நினைத்து பெருமைப்படுகிறேன் ” என்று கூறியிருந்தார்.

- Advertisement -

இதற்கு ரசிகர் ஒருவர் மேலும் பல படங்களில் ஐஸ்வர்யாராயே நடிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று அபிஷேக் பச்சனிடம் கேட்டிருந்தார். அதற்கு அவர் ” ஐஸ்வர்யா ராய் மேலும் அடிப்பதற்கு என்னுடைய அனுமதி அவருக்கு தேவையில்லை. அவருக்கு என்ன தோன்றுகிறதோ அதையே செய்யலாம். அதைத்தான் நானும் விரும்புகிறேன் ” என்று பதில் அளித்து இருந்தார்.

அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் தம்பதியினருக்கு ஆரத்யா என்னும் மகள் உள்ளார். இவர்களின் மகளை கவனித்துக் கவனித்துக் கொள்வதாலே ஐஸ்வர்யா ராய் திரைப்படங்களை கவனம் செலுத்த முடியவில்லை என்ற கருத்தும் அதிகமாக வெளிப்பட்டது. ரசிகரும் அவ்வாறே கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு நடிகர் அபிஷேக் பச்சன் கூறிய பதில் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Most Popular