Sunday, May 19, 2024
- Advertisement -
Homeசினிமாநம்ம பொழப்பு நாரப்பொழப்பா போச்சே ! விடாமுயற்சியை விட்டு விடப் போகும் லைக்கா நிறுவனம் !!

நம்ம பொழப்பு நாரப்பொழப்பா போச்சே ! விடாமுயற்சியை விட்டு விடப் போகும் லைக்கா நிறுவனம் !!

அஜித் குமாரின் அடுத்த படமான விடாமுயற்சி எப்பொழுது வரும் என்று ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு, ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்று வந்து அறிவிப்பு மகிழ்ச்சியை கொடுத்தது !! ஆனால் அதுவும் காணல் நீராக மாறிவிட்டது.

- Advertisement -

அஜித் குமாரின் நடிப்பில் போனி கபுரின் தயாரிப்பில் துணிவு ,வலிமை என்று அடுத்தடுத்து படங்கள் வெளிவந்தன. பல விமர்சனங்கள் இருந்தாலும்கூட, அஜித் திரையில்” வந்தா மட்டும் போதும்” என்ற ரசிகர்களின் அன்பினால் வசூல் சாதனைகள் படைத்தது.

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அஜித் குமார் அடுத்ததாக நடிக்க இருக்கும் படம் விடாமுயற்சி. விக்னேஷ் சிவன் முதலில் விடாமுயற்சியை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் திரைக்கதையில் திருப்தி இல்லாததால் விக்னேஷ் சிவன் அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டார்.

- Advertisement -

பின்னர் அருண் விஜயின் தடையறத் தாக்க, ஆர்யாவின் மீகாமன் என்று ஆக்ஷன் அதிரடி படங்களை பக்காவாக கொடுத்த மகிழ் திருமேனி விடாமுயற்சியின் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.

- Advertisement -

அன்றிலிருந்து ,இப்பொழுது படப்பிடிப்பு தொடங்கும், அடுத்த முதல் வாரத்தில் தொடங்கும், என்று ஒவ்வொரு வாரமும் ஆரவாரமாக அறிக்கைகள் மட்டும் வெளிவந்த வண்ணம் இருந்தது.
சென்ற மாதம் கூட விடாமுயற்சியின் படப்பிடிப்பு தொடங்கும் என்று வெளிவந்த தகவலில், ஆர்வமாகிய ரசிகர்கள் விடாமுயற்சியின்  படப்பிடிப்பு காட்சிகளின் புகைபடங்கள் வெளிவரும் என்று காத்திருந்தார்கள்..

ஆனால் நார்வே நாட்டில் நடக்கும் பைக் ரேஸ்க்கு சென்ற அஜித்குமார், தன் ரசிகர் ஒருவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். உடல் எடையை குறைத்த உடன் படப்பிடிப்பு தொடங்குவார் “தல “என்று தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டார்கள் ரசிகர்கள்.

  ஆனால் படத்தின் ஒரு காட்சி கூட “இல்லை இல்லை” ஒரு புகைப்படம் கூட இதுவரை எடுக்கப்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மை!!! அடுத்த நடிகர்களின் படங்கள் வெளிவந்து சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் வேளையில் ,அஜித் ரசிகர்கள் விரக்தியின் உச்சத்துக்கே சென்று விட்டனர்..

ரசிகர்களை விட அதிக விரக்தியில் இருப்பது விடாமுயற்சியின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் தான்..ஏனெனில் மணிரத்தினம் கூட பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களையும் மூன்றே மாதத்தில் முடித்துக் கொடுத்துள்ளார்.‌ சந்திரமுகி 2 படம்  விநாயகர் சதுர்த்தி அன்று திரைக்கு வர ஆவி பறக்க ரெடி ஆகி வருகிறது…!

லைக்காவின் அடுத்த படமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் 
படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டதாம்.. பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இன் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பும் ஏறக்குறைய முடிந்து விட்டது.
இப்படி லைக்கா நிறுவனத்தின் படங்கள் எல்லாம் டாப் கியரில் சென்று கொண்டிருக்க, விடாமுயற்சி மட்டும் இருந்து இருந்த இடத்திலேயே நின்று கொண்டிருப்பது லைக்காவை , விடாமுயற்சியை அன்லைக் செய்ய வைத்துள்ளது.

இந்த மாதம் எப்படியும் படப்பிடிப்பை தொடங்கி விடலாம் என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்கள், மற்றும் லைக்கா விற்கு பேரிடியாக வந்துள்ளது அஜித் இடம் இருந்து வந்துள்ள ஒரு தகவல்.
வழக்கம்போல! இன்னும் கொஞ்சம் படப்பிடிப்பிற்கு தாமதமாகும் என்ற தகவல் தான் அது!இதனால் வெறுப்படைந்த லைக்கா, இந்த விளையாட்டை இப்படியே நிறுத்திக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து விட்டதாகவே ??! கோலிவுட்டில் தகவல்கள் தீயாக சுற்றி சுழன்று அடிக்கின்றது !!!

Most Popular