Wednesday, April 17, 2024
- Advertisement -
Homeசினிமாமீண்டும் திரையரங்கில் வெளியாகும் மாநாடு ! சிம்பு ரசிகர்கள் உற்சாகம் !

மீண்டும் திரையரங்கில் வெளியாகும் மாநாடு ! சிம்பு ரசிகர்கள் உற்சாகம் !

கொரோனா, திரைப்பட ஒத்திவைப்பு, முதல் காட்சி ரத்து உள்ளிட்ட பல சிக்கல்களை தாண்டி மாநாடு திரைப்படம் நவம்பர் 25ஆம் தேதி உலகெங்கும் வெளியானது. முழு நேரத்தையும் அர்பணித்து உடல் எடையை குறைத்து மாநாடு திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அதிரடி கம்பேக் கொடுத்தார் சிம்பு. நடிகர் சிலம்பரசனின் இந்த கம்பேக்கை அவர்கள் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

- Advertisement -

வெங்கட் பிரபு இயக்கிய இந்த படத்தின் திரைக்கதை ஃபர்ஸ்ட் கிளாஸ். டைம் லூப் பற்றிய கதையில் வந்த காட்சியே மீண்டும் மீண்டும் வந்தாலும் ரசிகர்களை சீட் எட்ஜுக்கு அழைத்துச் சென்றார். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும் தரம். நடிப்பில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, மகேந்திரன் உள்ளிட்ட அனைவரும் அசத்தினர். இடையில் காமெடி, ஆக்ஷன் என கமர்சியல் வடிவில் உருவான இந்த படத்தை அனைத்து வித பார்வையாளர்களும் ரசித்து கொண்டாடியதே மாபெரும் வெற்றியை பெற்றுத் தந்தது.

நவம்பர் மாதம் வெளியான இந்த படம் 100 நாட்கள் வரை தொடர்ந்து திரையிடப்பட்டது. சுமார் 117 கோடி வசூல் செய்தது என கூறுகின்றனர். தற்போது மீண்டும் மாநாடு திரைப்படம் திரையரங்கில் வெளியாகப்ப போவதாக இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். எந்த வித சலிப்பும் இல்லாமல் மீண்டும் திரையரங்கில் காண நாங்கள் ரெடி என சிம்பு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

- Advertisement -

மாநாடு திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ராணா டகுபதி நடிக்கிறார். விரைவில் இந்த ரீமேக்கும் திரையரங்கில் வெளியாகவுள்ளது. நடிகர் சிம்புவின் படங்கள் தற்போது அடுத்தடுத்த மாதங்களில் வெளியாகிறது. சென்ற மாதம் மஹா, இந்த மாதம் மாநாடு அடுத்த மாதம் வெந்து தணிந்தது காடு. அதைத் தொடர்நது இந்த ஆண்டின் இறுதியில் பத்து தல படமும் திரைக்கு வரவிருக்கிறது. இதனால் சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் காணப்படுகின்றனர்.

- Advertisement -

Most Popular