Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசினிமா10 வருடங்களுக்குப் பிறகு வெளியாக இருக்கும் இரண்டாம் பாகம் மக்கள் செல்வன் திரைப்படத்தின் புதிய அப்டேட்!

10 வருடங்களுக்குப் பிறகு வெளியாக இருக்கும் இரண்டாம் பாகம் மக்கள் செல்வன் திரைப்படத்தின் புதிய அப்டேட்!

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் விஜய் சேதுபதி . இவர் கதாநாயகனாக மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடம் மற்றும் வில்லன் போன்ற எல்லா பாத்திரங்களிலும் தனது நடிப்பை திறம்பட காட்டி வருகிறார் . தற்போது கூட வெற்றி மாறன் இயக்கத்தில் இவர் நடித்த விடுதலை திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது சூரி கதாநாயகனாக நடித்திருந்தாலும் அந்த திரைப்படத்தில் இவர் நடித்துள்ள தாபாத்திரம் வெற்றிகரமாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது .

- Advertisement -

இதைத் தவிர்த்து ஹிந்தி சினிமாவிலும் ஜவான் என்ற திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி . இவர் நடித்த பார்சி என்ற இணையதளத்துடன் மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது . சாகித் கபூர் நடித்திருந்த அந்த தொடரில் காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பார் விஜய் சேதுபதி.. இவ்வாறு தமிழ் சினிமா மட்டுமல்லாது தெலுங்கு மலையாளம் இந்தியனா பிறமொழி படங்களிலும் தனது அபாரமான திறமையை காட்டி வருகிறார் இவர் .

தற்போது சினிமா வட்டாரங்களில் வெளியாகி இருக்கின்ற தகவல்களின்படி இவரது நடிப்பில் பூவாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற ஒரு திரைப்படம் ஒன்று தற்போது இரண்டாம் பாகம் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன . அதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன . பத்தாண்டுகளுக்கு முன் வெளியான அந்த திரைப்படம் விஜய் சேதுபதியின் சினிமா கேரியரில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது என்பது மறுக்க முடியாதது .

- Advertisement -

நலன் குமாரசுவாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி பாபி சிம்ஹா கருணாகரன் . ரமேஷ் திலக் அசோக் செல்வன் மற்றும் சஞ்சிதா செட்டி ஆகியோர் நடித்த திரைப்படம் சூது கவ்வும் இந்தத் திரைப்படம் 2013 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது 2 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 35 கோடி வரை லாபம் எட்டியது . இந்த வருடத்தின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக இந்த திரைப்படம் அமைந்தது . இது தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது . நீண்ட நாட்களாக திரைப்படத்தில் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல்கள் வந்தன . ஆனால் சில காரணங்களால் அது தள்ளிப் போயிருந்தது . தற்போது அதன் படப்பிடிப்பு நாளை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது .

- Advertisement -

சூது கவ்வும் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை யங் மங் சங் திரைப்படத்தை இயக்கிய அர்ஜுன் இயக்குகிறார் . இந்தத் திரைப்படத்தில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடிக்கிறார் . சத்யராஜ் ராதாரவி மற்றும் கருணாகரன் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்க இருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவில்லையே என நமக்கு தோன்றும் ஆனால் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன தற்போது அவருக்கு இருக்கும் பிசி செடியில் இத்திரைப்படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க இருக்கிறார் .

Most Popular