Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசினிமாஆஸ்கார் விருது இல்லனா பரவாயில்லை... ! தேர்வுக் குழுவுக்கு நான் செல்கிறேன் என கிளம்பிய மணிரத்னம்.....

ஆஸ்கார் விருது இல்லனா பரவாயில்லை… ! தேர்வுக் குழுவுக்கு நான் செல்கிறேன் என கிளம்பிய மணிரத்னம்.. !

இயக்குனர் மணிரத்னம் 35 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் மாஸ்டர்பீஸ் படங்களை கொடுத்து வருகிறார். மௌனராகம் முதல் ஓகே கண்மணி வரை மணிரத்னத்தின் காதல் படங்களுக்கெனவே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அதற்கு ஓர் முக்கிய காரணம் காலத்திற்கு ஏற்ப்ப அவர் மாறுவதே.

- Advertisement -

அவரது படங்கள் உலகத்தரம் வாய்ந்தவை என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர். இதுவரை அதற்காக ஆஸ்கார் விருதுகள் வெல்லவில்லை என்றாலும் தற்போது அவருக்கு ஆஸ்கார் குழுவில் இருந்து கவுரம் கிடைத்துள்ளது. மணிரத்னம் உட்பட இன்னும் 3 கலைஞர்களுக்கும் அது அளிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்கார் தேர்வு குழுவில் இயக்கு மணிரத்னம்னர் மணிரத்னம்

அண்மையில் வெளியான மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் 2 இந்த ஆண்டு ஆஸ்கார் விருதுப் பட்டியலில் இடம்பெறும் என நினைப்பதற்கு முன்பே அப்படத்தின் இயக்குனர் ஆஸ்கார் தேர்வு குழுவில் இடம் பெற்றுவிட்டார். பல்வேறு நாடுகளில் இருந்து போட்டியிடும் படங்களில் சிறந்தவையை தேர்வு செய்யும் குழுவே அது.

- Advertisement -

ஆஸ்கார் தேர்வு குழுவில் மற்ற இந்திய பிரபலங்கள்

2023ஆம் ஆண்டிற்கான தேர்வு குழுவில் மணிரத்னம் அவர்களுடன் மற்ற 3 பிரபலங்களும் இடம் பெற்றுள்ளனர். அந்த மூன்று பிரபலங்கள் ஆர்.ஆர்.ஆர் பட குழுவைச் சேர்ந்தவர்களே ! சென்ற ஆண்டிற்கான நிகழ்ச்சியில் நாட்டு நாட்டுப் பாடலுக்கு விருது வென்ற இசையமைப்பாளர் கீரவாணி, நடிகர் ராம்சரண் மற்றும் ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் ஆகியோர் ஆவர். இது ஆர்.ஆர்.ஆர் படக்குழுவுக்கு கிடைத்த மற்றொரு கவுரவம்.

- Advertisement -

ஒட்டுமொத்தமாக 398 சினிமா கலைஞர்களுக்கு இந்த ஆண்டு ஆஸ்கார் தேர்வுக் குழுவில் இணையுமாறு ஆஸ்கார் தலைமை செயலாளர் பில் கிரெமார் அழைப்பு விடுத்துள்ளார். இதில் 4 இந்தியர்கள் இடம்பெற்றிருப்பது மிகப் பெருமையான ஒன்று. இவர்களைப் பாராட்டி ஏ.ஆர்.ரஹ்மான் டிவிட் செய்துள்ளார். ஏற்கனவே கோலிவுட்டில் இருந்து ரஹ்மானும் நடிகர் சூர்யாவும் அந்தப் குழுவில் உறுப்பினர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்பட்டியலிப் இயக்குனர்கள் பிரிவில் மணிரத்னம் இணைந்துள்ளார்.

Most Popular