Sunday, May 5, 2024
- Advertisement -
Homeசினிமாமீண்டும் பழிவாங்க வருகிறான் இரும்பொறை அரசன்..! மரகத நாணய படக்குழு அறிவிப்பு

மீண்டும் பழிவாங்க வருகிறான் இரும்பொறை அரசன்..! மரகத நாணய படக்குழு அறிவிப்பு

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய வித்தியாசமான திகில் நகைச்சுவை திரைப்படம் என்றால் அது மஎடுத்திருக்கிறது. இது தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சக்கை போடு போட்டது.

- Advertisement -

இந்த திரைப்படம் மூலம் ஆதி மற்றும் நிக்கிக் கல்ராணி ஆகியோருக்கு காதல் மலர்ந்தது. இந்த திரைப்படம் ஆதிக்கும் மிகத் திருப்புமுனையாக அமைந்தது. ஆனந்தராஜ் இந்தப் படம் மூலம் தான் தன்னை காமெடியனாகவும் நிலை நிறுத்திக் கொண்டார்.

யாருமே யோசிக்காத வகையில் வித்தியாசமான கதைகளைக் கொண்டு சிரிப்பு விருந்தை இந்த படம் மூலம் இயக்குனர் ஏ ஆர் கே சரவணன் வழங்கினார். இந்த நிலையில் சரவணன் தற்போது இயக்கிய வீரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை.

- Advertisement -

ஹிப் ஹாப் ஆதி காமெடியில் வீரன்  கோட்டை விட்டதாகவும் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். இதனால் மீண்டும் மரகத நாணயம் கதையை இயக்குனர் ஏ ஆர் கே சரவணன் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

முதல் பாகத்தில் இரும்பொறை அரசன் கல்லறையில் இருந்து ஆனந்தராஜ் அடியாட்கள் மரகத நாணயத்தை எடுக்கும்போது அவரைக் கொல்ல அந்த லாரியில் இரும்பொறை அரசன் ஆவியாக வருவார்.

அப்போது அந்த மரகத நாணயத்தை  தூக்கிப்போட்டு விட்டு ஆனந்த் ராஜ் அடையாளம் தெரியாமல் சுற்றுவார். அப்போது அந்த வழியாக வரும் நடிகர் பிரம்மானந்தம் மீண்டும் மரகத நாணயத்தை ஆனந்த ராஜிடம் கொடுத்து விடுவார்.

இத்துடன் முதல் பாகம் முடிந்துவிடும்
தற்போது இந்த கதையை தொடர்ந்து எடுக்க இயக்குனர் சரவணன் முடிவெடுத்துள்ளார். இதில் ஆதி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்க இருக்கிறார்கள்.

இந்த படத்தின் சூட்டிங் வரும் செப்டம்பர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.மரகத நாணயம் படத்தின் பெயரை வைத்து இரண்டாவது பாகத்தில் எடுத்தால் மக்கள் அதிக அளவு திரையரங்குகளுக்கு வருவார்கள் என்று யுத்தியை தான் தற்போது பட குழு கையில் எடுத்திருக்கிறது

Most Popular