Saturday, May 4, 2024
- Advertisement -
Homeசினிமாதன் கண்ணீர் அஞ்சலி போஸ்டருடன் செல்ஃபி எடுத்துள்ளார் மாரிமுத்து.. ! திரையில் 2 முறை தன்...

தன் கண்ணீர் அஞ்சலி போஸ்டருடன் செல்ஃபி எடுத்துள்ளார் மாரிமுத்து.. ! திரையில் 2 முறை தன் சாவை கணிப்பு.. !

இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து இன்று மாரடைப்பால் உயிரிழந்தார். இச்செய்தி ஒட்டுமொத்த திரையுலகையும் மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எதிர்நீச்சல் சீரியலில் மூலம் மிகவும் பிரபலமடைந்து சிறப்பாக சென்று கொண்டிருந்த மாரிமுத்துவின் வாழ்கைக்கு தீடீரென ஓர் முற்றுப்புள்ளி.

- Advertisement -

மாரிமுத்து அவர்கள் இயக்குனராக கண்ணும் கண்ணும் மற்றும் புலிவால் ஆகிய இரண்டு படங்களை மட்டுமே இயக்கியுள்ளார். நடிகராக 75 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். அண்மையில் வெளியான ஜெயிலர் படத்தில் கூட இடம் பெற்றிருந்தார்.

மாரிமுத்து இறப்பதற்கு முன் விழா நாயகன் எனும் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அந்தப் படத்தில் அவர் இறந்ததாக ஓர் பேனர் வைக்கப்பட்டது. ஷூட்டிங் முடிந்த பின்னர் தன் கண்ணீர் அஞ்சலி பேனருடன் மாரிமுத்து செல்ஃபி எடுத்தப் புகைப்படம் தற்போது வைரல் ஆகியுள்ளது.

- Advertisement -

திரையில் நடப்பது விரைவில் நிஜமாகும் என அவர் செல்ஃபி எடுக்கும் போது நிமைதிருப்பாரா என சமூக வலைதளங்களில் மக்கள் வருந்தி பதிவிட்டு வருகின்றனர். மேலும் இதே போல எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்து ஒரு காட்சியில் தனக்கு ஹார்ட் அட்டாக் வந்துவிடுமோ எனத் தோன்றுகிறது என ஓர் வசனத்தை பேசியிருப்பார். அதுவும் தற்போது நிஜமாகியுள்ளது.

- Advertisement -

சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கதாபாத்திரம் மூலம் பட்டி தொட்டி வரை மக்களின் மனதில் இடம் பிடித்தார். பல பட வாய்ப்புகளும் அவருக்கு அடுத்தடுத்து கிடைத்தது. பல்வேறு நேர்காணல் நிகழ்ச்சிகள் மூலம் மேலும் பிரபலமடைந்தார். சமூக வலைதளங்களில் மீம் கிரியேட்டர்களின் ஃபேவரைட் டெம்ப்ளேட்டாக உயர்ந்தார்.

சில மாதங்களுக்கு முன் சன் டிவியின் நேர்காணல் நிகழ்ச்சியில் தன் வாழ்க்கைப் பற்றிப் பேசியிருந்தார். அதில் அவர் இத்தனை ஆண்டுகள் கஷ்டப்பட்டதை விவரித்து இருந்தார். அவர், “ நான் இன்று இந்த நிலைக்கு வந்ததற்கு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அதுவரை என்னுடன் என் மனைவியும் குழந்தைகளும் சேர்ந்து கஷ்டப்பட்டனர். இன்று அந்தக் கஷ்டத்திற்கெல்லாம் விடிவுகாலம் வந்திருப்பது எனக்கு திருப்தி அளிக்கிறது. என் மனைக்கு மிகவும் பெருமிதம் கொள்கிறாள். ” என்றார்.

அவர் பேசிய வீடியோ காட்சியைப் பார்க்கும் போது கண்ணீர் மல்குகிறது. சிறிய காலத்தில் பல மக்களின் இதயத்தை வென்ற மாரிமுத்து இனி நம்முடன் இருக்க மாட்டார் என்பதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

Most Popular