Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசினிமாதுண்டு ஒரு தடவை தான் தவறும்.. தோல்விக்கு பிறகு காளை போல் சீறி எழும் முத்தைய்யா!

துண்டு ஒரு தடவை தான் தவறும்.. தோல்விக்கு பிறகு காளை போல் சீறி எழும் முத்தைய்யா!

தமிழ் சினிமாவில் கிராமிய கதைகளை ஜெனரங்கமாக சொல்லும் இயக்குனர்களின் முதன்மையானவர் இயக்குனர் முத்தையா. இவர் எடுத்த கொம்பன், மருது, விருமன் போன்ற திரைப்படங்கள் எல்லாம் மிகப்பெரிய வெற்றியை பெற்றவை.

- Advertisement -

எனினும் இவருடைய திரைப்படத்தில் ஜாதிய ரீதியில் கதைகள் இருப்பதாக விமர்சனங்களும் எழுந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட ஜாதியை மையமாக வைத்து அதனை தூக்கி பிடிப்பதால் தான் இவர்களுடைய படம் ஓடுவதாகவும் கூறப்படுகிறது.

அதை தவிர்த்து பார்த்தால் படத்தின் கதையை விறுவிறுப்பாக கொண்டு செல்லும் இயக்குனர்களில் முத்தையா முக்கியமானவர். இந்த நிலையில் மத ஒற்றுமையை முன்னிலைப்படுத்தி அவர் எடுத்த காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம் என்ற திரைப்படம் தோல்வியை தழுவியது.

- Advertisement -

அவர் எடுத்துக்கொண்ட கருத்து நல்லதாக இருந்தாலும் சொன்ன விதத்தில் முத்தையா கோட்டை விட்டுவிட்டார். இதனால் முத்தையா தற்போது மீண்டும் ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதற்காக அவர் தனது அடுத்த கிராமிய கதையை தயார் செய்து கொண்டிருக்கிறார்.

- Advertisement -

இந்த படத்தில் நடிகர் அருண் விஜயை வைத்து எடுக்க இருக்கிறாராம். அருண் விஜய் கடைசியாக நடித்த யானை திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. மேலும் கிராமிய கதைகளுக்கு சரியான தேர்வாகவும் அருண் விஜய் இருக்கிறார் என விமர்சனமும் கிடைத்தது.

இதனால் அருண் விஜய் வைத்து முற்றிலும் ஆக்சன் கலந்த ஒரு திரைப்படத்தை முத்தையா இயக்க இருக்கிறார்.தற்போது அருண் விஜய் பாலா திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.அந்த படம் முடிவடையும் தருவாயில் இருக்கிறது. இதனால் வரும் செப்டம்பர் மாதம் முதல் முத்தையாவின் புதிய படம் சூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular