Friday, May 3, 2024
- Advertisement -
Homeசினிமாசமந்தா குறித்து வெறுப்பான பதிலை கூறிய நாக சைதன்யா!

சமந்தா குறித்து வெறுப்பான பதிலை கூறிய நாக சைதன்யா!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் நாக சைதன்யா நடித்திருக்கும் கஷ்டடி திரைப்படத்தின் டிரைலர் நேற்று இணையதளங்களில் வெளியிடப்பட்டது. ட்ரெய்லர் வெளியிட்டதிலிருந்து இந்த திரைப்படத்தைப் பற்றிய பேச்சு தான் ரசிகர்களிடம் பெரும் அளவில் பரவி வருகிறது.

- Advertisement -

ஏனெனில் அனல் பறக்கும் அளவிற்கு விறுவிறுப்பாக அமைந்திருந்தது இந்த கஸ்டடி திரைப்படத்தின் உடைய ட்ரெய்லர்.
இந்த நிலையில் நேற்று கஸ்டடி திரைப்படத்தினுடைய ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் நாக சைதன்யா இந்த திரைப்படத்தின் கதாநாயகன் என்ற வகையில் கலந்து கொண்டிருந்தார்.

- Advertisement -

இதேபோல் திரைப்படத்திற்கான பிரமோஷன் களுக்கான நிகழ்ச்சிகளிலும் நடிகர் நாக சைதஞா தனியாக கலந்து கொண்டு வருகிறார். அப்படி அந்த நிகழ்ச்சிகளில் நடிகராக சைதன்யாவிடம் அவருடைய முன்னாள் மனைவி ஆன நடிகை சமந்தாவை பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

ஆரம்ப காலத்தில் ஏ மாயா சிசேவ் என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலில் இருவரும் இணைந்து நடித்தார்கள். இந்த திரைப்படம் தமிழில் வெளிவந்த இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு மற்றும் த்ரிஷா நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தின் உடைய தெலுங்கு வர்ஷன் ஆகும்.

இது ஜோடியாக நடித்த இருவருடைய கெமிஸ்ட்ரியும் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நிலையில் தொடர்ந்து இவர்கள் மனம் ஓ பேபி ஆட்டோ நகர் சூர்யா மஜிலி என்று வரிசையாக பல திரைப்படங்களில் இணைந்து நடித்து வந்தார்கள். அப்பொழுது இவர்களுக்குள் ஏற்பட்ட காதலின் காரணமாக 2017 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

இதற்குப் பிறகும் இருவரும் நல்லபடியாக வாழ்ந்து வரும் நிலையில் திடீரென்று கடந்த 2021 ஆம் ஆண்டு இருவரும் பிரியப்போதாக கூறி விவாகரத்தும் பெற்றுக் கொண்டார்கள். இப்பொழுது இருவரும் பிரிந்து இருக்கும் இந்த நிலையிலும் இவர்களைப் பற்றிய கேள்விகள் ஒவ்வொரு மேடையிலும் இருவரிடமும் கேட்கப்பட்டது.

எந்த மனிதனாக இருந்தாலும் பதில் சொல்ல முடியாத ஒரு கேள்வியை திரும்பி திரும்பி கேட்கப்பட்டால் ஒரு கட்டத்தில் அவன் எரிச்சல் அடைவது ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அந்த வகையில் நடிகர் நாக சைதன்யா இடம் கேட்கப்பட்ட சமந்தா குறித்த கேள்விக்கு சற்று எரிச்சல் உடன் அவர் பதில் அளித்தார்.

இதற்கு முன்பு சமந்தா விடும் நாக சைதன்யா பற்றி கேட்கப்பட்ட பொழுது அவரும் நானும் பிரிந்து இருந்தாலும் ஒருவரோடு ஒருவர் நட்போடு தான் இருக்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தார். இதைப்பற்றி தான் நடிகர் நாகசைதன்யா கேட்கப்பட்டது.
சற்று எரிச்சல் அடைந்த நாக சைதன்யா என்னை வேண்டாம் என்று பிரிந்து சென்றான் பிறகு என் நட்பு மட்டும் வேண்டுமாம் என்று அவர் கூறிய பதில் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

Most Popular