Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசினிமா“நந்தினி கதாபாத்திரத்திற்கு மேக்கப் கம்மியாக போட்டிருக்கலாம்”- வனிதா பேச்சு

“நந்தினி கதாபாத்திரத்திற்கு மேக்கப் கம்மியாக போட்டிருக்கலாம்”- வனிதா பேச்சு

எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி,திரைப்படமாக இயக்கியிருந்தார் இயக்குனர் மணிரத்தினம். இதை இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு முடிவு செய்து கடந்த செப்டம்பர் மாதம் முதல் பாகம் வெளியானது. அதனைத் தொடர்ந்து அதன் இரண்டாவது பாகம் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.பொதுவாக திரைப்படத்தை பார்ப்பவர்கள்,அவரவர்கள் பார்வைக்கு ஏற்ப கருத்துக்களை தெரிவிப்பது வழக்கம். ஆனால் இந்தத் திரைப்படத்தை தமிழ் திரையுலகத்தைச் சார்ந்த நடிகர் நடிகைகள் அனைவரும் இந்த படத்தை பிரமோஷன் செய்யும் அளவிற்கு அவர்களின் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகை வனிதா கூறிய கருத்தால் திரை உலகம் அவரை திரும்பிப் பார்க்க ஆரம்பித்துள்ளது.பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இயக்குனர் மணிரத்தினம் இயக்க, லைக்கா நிறுவனம் தயாரித்தது. இதில் நடித்தவர்கள் அனைவரும் பெரிய நட்சத்திர பட்டாளம் என்பதால் படத்தின் மீது ஆரம்பத்திலேயே அதிக எதிர்பார்ப்புகள் காணப்பட்டது. இந்த எதிர்பார்ப்புகள் அனைத்தையும் இந்த திரைப்படம் பூர்த்தி செய்ததால் என்ற கேள்விக்கு பதில்களை ஒவ்வொருவரும் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை திரையரங்கில் பார்த்துவிட்டு வெளியே வந்த நடிகை வனிதாவிடம் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் ” இந்த திரைப்படம் நன்றாக வந்திருக்கிறது என்னுடைய எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தி செய்யும் வகையில் இந்த திரைப்படம் அமைந்துள்ளது.இயக்குனர் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் சிறப்பாக வடிவமைத்ததோடு, அந்தக் கதாபாத்திரங்களை செதுக்கியுள்ளார்” என்று பதில் அளித்திருந்தார். மேலும் நிருபர்கள் நடிகை திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராயின் நடிப்புக்கொடுத்து கேட்கும்போது அவர் ” திரைப்படத்தில் இருவரும் சிறப்பாக நடித்திருந்தார்கள். வழக்கத்தை விட திரிஷா மிகவும் அழகாக இந்த படத்தில் காண்பிக்கப்பட்டார். வந்தியத்தேவன் மற்றும் ஆதித்யா கரிகாலன் நடிப்பு எப்போதையும் விட ஒரு படி மேலாக இருந்தது.ஆனால் எனக்கு ஒரு சின்ன வருத்தம், நடிகை ஐஸ்வர்யா ராயை நிகழ்வில் இருப்பது போலவே காண்பித்திருக்கலாம். அவரை இளமையாக காண்பிக்க வேண்டும் என்பதற்காக அளவு கடந்து போடப்பட்ட மேக்கப்பை மட்டும் தவிர்த்து இருக்கலாம். இதனால் அந்த கதாபாத்திரம் மட்டும் செயற்கையாக இருந்தது. நானும் நடிகை ஐஸ்வர்யா ராயின் தீவிர ரசிகைதான் ” என்று வனிதா நிருபர்களிடம் கூறியிருந்தார்.

- Advertisement -

Most Popular