சினிமா

வெற்றியுடன் திரும்பிய ஷாரூக்கான்.. பாலிவுட்டை காப்பாற்றிய பதான் ! விமர்சனம்

கொரோனாவுக்கு பிறகு பாலிவுட் சினிமா மிகவும் பரிதாபமான நிலையில் இருந்தது. பாலிவூட் இன் சூப்பர் ஸ்டார்களான அமீர்கான் அக்ஷய் குமார் போன்ற ஹீரோக்களின் படங்கள் மண்ணைக் கவ்வியது. பாலிவுட் ரசிகர்கள் அனைவரும் தற்போது தென்னிந்திய படங்களை விரும்பி பார்க்க தொடங்கி விட்டார்கள்.

Advertisement

இதனால் வட இந்திய திரைத்துறை மிகவும் சோகத்தில் இருந்தது. இந்த நிலையில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது திரைக்கு திரும்பி உள்ள ஷாருக்கான் பாலிவுட்டை காப்பாற்றுவாரா என்று கேள்வி திரை துறை வட்டாரங்கள் மத்தியில் இருந்தது. அதற்கான பதில் இன்று தெரிந்து விட்டது. ஷாருக்கானின் படமும் ஜீரோ, ஹீரோ  போன்ற படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவின. இதனால் படங்களின் நடிப்பதிலிருந்து விலகிக் கொண்ட ஷாருக்கான் நான்கு ஆண்டுகளுக்கு பிறகுதான் பதான் என்ற திரைப்படம் மூலம் பாலிவுட் சினிமாவுக்கு திரும்பி இருக்கிறார்.

இந்த படம் இன்று உலகம் முழுவதும் திரைக்கு வந்ததும. பதான் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்ததால் இந்தியா முழுவதும் முன்பதிவாகவே 5 லட்சம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தது. இது பாலிவுட் வரலாற்றில் அதிகம் ஆகும்.  இந்த நிலையில் பதான் படம் சிறப்பாக வந்திருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். முதல் காட்சியிலிருந்து படத்தின் விமர்சனம் சிறப்பாக வந்திருக்கிறது. ஷாருக்கான் ஹீரோவாகவும் ஜான் ஆபிரகாம் வில்லனாகவும் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் சல்மான்கான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

Advertisement

ரா ஏஜென்ட் ஆக உள்ள ஷாருக்கான் தனது பணியை விட்டு விலகிய நிலையில் ஜான் ஆபிரகாமால் இந்தியாவுக்கு ஆபத்து ஏற்படுகிறது. இதனை தடுப்பதற்காக மீண்டும் பணியில் சேரும் ஷாருக்கான் அதனை எப்படி தடுக்கிறார். ஜான் ஆபிரகாமை எப்படி எதிர்கொள்கிறார் என்பதே எஞ்சிய கதை . வார், எக் தா டைகர் போன்ற படங்களின் தொடர்ச்சியாக பதான் அமைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பதான் திரைப்படம் தமிழ் தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் ரிலீசாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top