Sunday, May 19, 2024
- Advertisement -
Homeசினிமாபொன்னியன் செல்வன் 2 முன்பதிவு தொடக்கம்- படக்குழுவினர் அதிர்ச்சி

பொன்னியன் செல்வன் 2 முன்பதிவு தொடக்கம்- படக்குழுவினர் அதிர்ச்சி

- Advertisement -

தமிழ் சினிமாவில் முதல் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை படைக்க போகும் திரைப்படமாக பொன்னியின் செல்வன் 2 இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். தமிழகத்தில் பலரும் எடுக்க ஆசைப்பட்டு கைவிட்ட நாவலை இயக்குனர் மணிரத்தினம் எடுத்த போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியது.

இதனால் பொன்னியின் செல்வன் முதல் பாகம் திரைப்படம் உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை செய்தது. தமிழகத்தில் மட்டும் 220 கோடி ரூபாய் வரை பொன்னியின் செல்வன் 2 வசூல் செய்தது. எப்போதுமே முதல் பாகத்தை விட இரண்டாவது பாகத்துக்கு தான் அதிக வசூல் எதிர்பார்ப்பு நிலவும்.

- Advertisement -

உதாரணத்திற்கு பாகுபலி முதலாம் பாகத்தை விட பாகுபலி இரண்டாவது பாகம் அதிக வசூல் சாதனை படைத்தது. இதேபோன்று கேஜிஎப் முதல் பாகத்தை விட கேஜிஎப் 2 பாகம் தான் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்தது. இதே போல் பொன்னியின் செல்வன் 2 படம் முதல் பாகத்தை விட பல மடங்கு வசனம் செய்கின்றனர்.

- Advertisement -

தற்போது தலைகீழ் அனைத்தும் நடக்கிறது.  முதல் பாகத்திற்கு எதிர்பார்ப்பு கொஞ்சம் கூட இரண்டாவது பாகத்திற்கு இல்லை என தெரிகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு திரையரங்குகளில் நேற்று இரவு முதல் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கான முன்பதிவு நடைபெற்றது. இதில் ரசிகர்கள் பெருமளவு ஆர்வம் காட்டாமல் இருக்கிறார்கள். இதனால் ஒரு சில டிக்கெட்டுகள் மட்டுமே விற்கப்பட்டிருக்கிறது.

ஆனால் முதல் பாகத்திற்கு  தொடங்கிய சில நேரத்திலே டிக்கெட்கள் அனைத்தும்  விற்று தீர்ந்தன. இதனால் முதல் பாகத்திற்கு இந்த வசூல் இரண்டாவது பாகத்துக்கு இருக்காது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பட குழு மற்ற மாநிலங்களில் கவனம் செலுத்தாமல் முதல் தமிழகத்தில் படத்தை நன்றாக பிரபலப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுவாக ஏப்ரல் மாதத்தில் தமிழ் புத்தாண்டு தினம் அன்று வெளியாகும் திரைப்படம் நல்லூர் வசூலைக் குவிக்கும். ஆனால் இம்முறை பொன்னியின் செல்வன் தான் அந்த குறையை நிவர்த்தி செய்யும் என திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால்  டிக்கெட்டுகள் விற்கப்படாதது அவர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.இதனால் படத்திற்கு நல்ல ரிசல்ட் கிடைத்தால் மட்டுமே ஓரளவுக்கு வசூல் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular