Friday, May 3, 2024
- Advertisement -
Homeசினிமாநாகா சைதன்யாவுடன் காதாலா ? மொளனம் களைத்துள்ள பொன்னியின் செல்வன் நடிகை ஷோபித்தா.. !

நாகா சைதன்யாவுடன் காதாலா ? மொளனம் களைத்துள்ள பொன்னியின் செல்வன் நடிகை ஷோபித்தா.. !

கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் நடித்து வருபவர் ஷோபித்தா துலிபாலா. மணிரத்னத்தின் பிரமாண்ட இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வந்தார். பொன்னியின் செல்வன் மற்றும் அருள்மொழி வரமனாக வரும் ஜெயம் ரவியின் காதலியாக வானதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

- Advertisement -

மறுபக்கம் தெலுங்கு சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருபவர் நாகா சைதன்யா. இவருக்கும் ஷோபித்தா துலிபாலாவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக செய்திகள் காட்டுத் தீ போல பரவியது. இருவரும் லண்டனில் ஓர் ஹோட்டலில் ஒன்றாக உணவு சாப்பிடுவது போல் புகைப்படம் வெளியானது.

சமூக வலைதளங்களில் சிலர் இது தான் சாக்கு என பிரிந்த சமந்தாவையும் இதில் இழுத்தனர். சமந்தா சொன்னது போல் பலவற்றை பரப்பினர். இதையெல்லாம் நான் சொல்லவில்லை என சமந்தா தன் டிவிட்டர் பக்கத்தில் கூறிவிட்டார்.

- Advertisement -

இறுதியாக ஷோபித்தா துலிபாலாவே இது குறித்து பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது, “ யாரோ எதோ சொல்கிறார்கள் என்பதற்காக இதையெல்லாம் கண்டுகொண்டு வருந்துவதில் எந்தப் பிரியோஜனமும் இல்லை. எனக்கும் இதற்குக் சம்மந்தமே இல்லாத போது நான் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. நாம் அமைதியாக என் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடி வருகிறேன். ” என்றார்.

- Advertisement -

சமூக வலைதளங்களில் இருவர் ஒன்றாக வெளியில் சென்றாலோ புகைப்படங்கள் வெளியிட்டாலோ உடனே அதனைக் காதல் எனக் கூறி இஷ்டத்துக்கு வதந்திகளைப் பரப்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.

Most Popular