Tuesday, July 23, 2024
- Advertisement -
Homeசினிமாஎனக்கு அதுதான் முக்கியம் என்று கூறிய இயக்குனர்.. இதனால் தயங்கிய நடிகை பூர்ணா..!

எனக்கு அதுதான் முக்கியம் என்று கூறிய இயக்குனர்.. இதனால் தயங்கிய நடிகை பூர்ணா..!

தமிழ் சினிமாவில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற நடிகர் பரத் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூர்ணா.

- Advertisement -

இவர் ஒரு மலையாள நடிகையாவார் முனியாண்டி திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் இவர் கொடைக்கானல்,  கந்தகோட்டை ,துரோகி ,ஆடுபுலி ,வேலூர் மாவட்டம்,வித்தகன் போன்ற ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். அந்த திரைப்படங்கள் எல்லாம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரும் வெற்றியை இவருக்கு தரவில்லை.

தமிழ் மலையாள மட்டும் இல்லாமல் கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடிகை பூர்ணா நடித்திருக்கிறார் .இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆசிப் அலி என்று சொல்லப்படும் இஸ்லாமிய தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு இவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் பிறந்திருந்தது.

- Advertisement -

இந்நிலையில் இவர் தற்பொழுது நடிகர் மகேஷ்பாபு மற்றும் ஸ்ரீலிலா நடித்த குண்டூர் காரம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் குறிச்சி மரத்துப்பட்டி என்ற பாடலில் ஆடிய நடனம் வைரலாகி இருக்கிறது .அது குறித்து ஒரு பேட்டி இவர் தற்பொழுது பேசியிருக்கிறார்.

- Advertisement -

இந்தப் பாடல் தற்பொழுது இணையத்தில் மிகவும் வைரலான பாடலாக இருக்கிறது இதில் நடனமாடிய பூர்ணாவிடம் இது பற்றி கேட்டதற்கு நான் அந்தப் பாடலில் ஆடி இருக்கிறேன் என்பது அந்த திரைப்படம் வெளிவரும் வரை யாருக்குமே தெரியாது. அந்தப் பாடலில் ஆடி இருப்பது போன்ற எந்த ஒரு விஷயமும் இதற்கு முன்பு வெளிவரவில்லை.

நானும் மகேஷ் பாபுவும் என் குழந்தையுடன் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்கள். அப்பொழுது  அனைவரும் நான் அந்த திரைப்படத்தில் நடிக்கிறேன் என்று தான் நினைத்தார்கள். பாடலில் ஆடி இருப்பேன் என்று நினைக்கவில்லை .எனக்கே நான் அந்த பாடலில் ஆட போகிறேன் என்பது எனக்கு தெரியாது. நான் இப்பொழுது கொஞ்சம் உடல் பருமன் ஆகி விட்டேன் இந்த சமயத்தில் ஆடினால் நன்றாக இருக்காது என்று டான்ஸ் மாஸ்டரிடம் கூறினேன்.

அதற்காக பூரண உனக்கு கம்போர்ட் ஆக இருப்பது போன்ற ஸ்டெப்ஸை சொல்லித் தருகிறேன். அப்படி என்று கூறிவிட்டு எனக்கு கோடியோ கிராப் செய்தார். நான் ஆடிய நடனத்தை யாரும் இதுவரை குறை கூறவும் இல்லை தவறாக பேசவும் இல்லை என்று கூறியிருந்தார் நடிகை பூர்ணா.

மேலும் இயக்குனர் என்னிடம் இந்தப் பாடலில் முதல் சில வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அது ஒருவரையும் அறிமுகப்படுத்தும் அளவிற்கு உள்ள  வரிகளாகும். நான் அதற்காகவே அதை அவ்வாறு எழுதினேன் . அதற்குப் பிறகு இந்த பாடல் முழுதும் வெறும் நடனம் ஆகத்தான் போகும் .அதனால் முதல் சில வரிகளில் முக்கியத்துவம் காட்டி கவனமாக நடிக்க வேண்டும் என்று எனக்கு கூறினார் என்றும் குறிப்பிட்டிருந்தார் நடிகை பூர்ணா

Most Popular