சினிமா

பிரதீப் ரங்கநாதன் காட்டில் மழை.. வரிசை கட்டி நிற்கும் படங்கள்

வளர்ந்து வரும் இளம் இயக்குனரான பிரதிப் ரங்கநாதன் தற்பொழுது வரிசையாக பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. அவர் முதலில் இயக்கிய நடிகர் ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு இவர் இயக்கி நடித்த லவ் டுடே என்ற திரைப்படம் பெரும் அளவில் வெற்றி பெற்றது.

Advertisement

ஒரு திரைப்படம் வெற்றி அடைந்திருக்கிறது என்பதற்கு பெரிய சான்று ஒட்டிட்டியில் வெளியிடப்பட்ட பிறகும் 100 நாட்கள் வரை சில திரையரங்குகளில் போடப்பட்டு வந்தது .இன்றைய காலகட்ட சினிமாவில் இதுவெல்லாம் மிகப்பெரிய சாதனை ஆகும். இவை எல்லாம் ஒரு புறம் இருக்க தற்பொழுது பிரதீப் ரங்கநாதனுடைய திறமைக்கு பட வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கின்றது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் தன்னுடைய அடுத்த படத்தை நடிக்க இருக்கிறார். மேலும் விக்னேஷ் சிவன் தன்னுடைய மனைவியை தான் கதாநாயகியாக நடிக்க வைப்பார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்தத் திரைப்படத்தை உலக நாயகன் கமலஹாசனின் உடைய தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிளம் இண்டஸ்ட்ரீஸ் தயாரிக்க இருக்கிறார்கள் என்றும் தகவல் வெளிவந்திருக்கிறது.

Advertisement

மேலும் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸினுடைய துணை இயக்குனராக பணியாற்றிய மிதுன் இயக்கத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் ஒரு திரைப்படம் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தானா நடிக்க போகிறாரா இல்லை பிரியங்கா அருள் மோகன் நடிக்கப் போகிறாரா என்று முடிவு செய்யவில்லை.

ஆனால் இவர்களை ஒருவர்தான் இந்த திரைப்படத்தில் கதாநாயகி என்று கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்திற்கு கூடுதல் பெருமை சேர்க்கும் இடத்தில் இப்ப திரைப்படத்தின் இசையமைப்பாளராக இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதுவெல்லாம் பிரதீப் ரங்கநாதனின் சினிமா வாழ்வில் வளர்ச்சியின் அடையாளங்கள் ஆகும்.

இவர் ஒரு நடிகர் மட்டுமில்லை இயக்குனரும் என்பதை நிரூபிக்கும் வகையில் இவருடைய இயக்கத்திலேயே மீண்டும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசையமைப்பில் ஒரு திரைப்படம் இயக்க இருக்கிறார் என்ற தகவலும் தற்பொழுது வெளிவந்து இருக்கிறது.

Advertisement

இவரை ஒரு இயக்குனராக மட்டுமல்லாமல் ஒரு நடிகனாகவும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்பதால் இந்த திரைப்படங்களின் மீதும் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top