Thursday, March 28, 2024
- Advertisement -
Homeசினிமாஜெயம் ரவியுடன் மீண்டும் இணையும் கோமாளி இயக்குனர்.. மேடையில் நெகிழ்ச்சி பேச்சு

ஜெயம் ரவியுடன் மீண்டும் இணையும் கோமாளி இயக்குனர்.. மேடையில் நெகிழ்ச்சி பேச்சு

- Advertisement -

இயக்குனர் கல்யாண் கிருஷ்ணனின் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் அகிலன் திரைப்படம் வருகின்ற மார்ச் பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது. நேற்று இந்த திரைப்படத்தின் உடைய ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் படத்தில் நடித்தவர்களுடன் இணைந்து சில இயக்குனர்களும் இசையமைப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.இதில் இளம் இயக்குனர் பிரதிப் ரங்கநாதனும் கலந்து கொண்டார். மேடையில் அவருடைய வாய்ப்பு கிடைக்கும் பொழுது அவர் நடிகர் ஜெயம் ரவியை பற்றி பேசி இருந்தார்.

- Advertisement -

மேடையில் மைக்கை வாங்கிய உடனே ரசிகர்கள் செய்த ஆரவாரத்தில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் வாய் அடைத்து திகைத்து சில நிமிடம் நின்றார். பிறகு அவர் முதலில் சொல்லத் தொடங்கியதே அந்த ட்ரைலரில் இறுதி நிமிடத்தில் ஜெயம் ரவியின் நடிப்பு என்னை அறியாமல் சிரிக்க தோண்டியது என்று தனது பேச்சை தொடங்கினார்.

- Advertisement -

எல்லாருக்கும் முதல் அடி மிகவும் கடினமானது என்று கூறுவார்கள், அதை நான் நடிகர் ஜெயம் ரவியுடன் தான் தொடங்கினேன் என்பதை அந்த இடத்தில் பிரதீப் ரங்கநாதன் குறிப்பிட்டிருந்தார். இங்கு நான் நிற்கும் பொழுது எனக்கு கிடைக்கும் இந்த ஆரவாரங்கள் எல்லாவற்றிற்கும் நடிகர் ஜெயம் ரவியை வைத்து நான் இயக்கிய கோமாளி திரைப்படமே காரணம் ஆகியது என்பதை தான் அவர் அந்த இடத்தில் கூறினார்.

நடிகர் ஜெயம் ரவியுடன் நான் இயக்கியது முதல் திரைப்படம். ஆனால் என்னை ஒரு பொழுதும் அப்படி ஜெயம் ரவி நினைத்ததே இல்லை. நான் என்ன சொல்கிறேனோ அதைக் கேட்டு சரியாக நடிப்பார். அவருடன் பணியாற்றிய போது எனக்கு நான் முதல் படம் எடுக்கிறேன் என்ற உணர்வே இருந்ததில்லை. அவர் கொடுத்த அந்த இடம்தான் என்னை இவ்வளவு தூரம் முயற்சி இருக்கிறது என்பது போன்று நடிகர் ஜெயம் ரவியை பற்றி பிரதீப் ரங்கநாதன் குறிப்பிட்டிருந்தார்.

அதே போல் கோமாளி திரைப்படத்திற்காக நடிகர் ஜெயம் ரவி எவ்வளவு உழைத்தார் என்பதையும் அவர் கூறியிருந்தார். மேலும் கோமாளி திரைப்படம் முடிந்த பிறகு நடிகர் ஜெயம் ரவியிடம் இன்னொரு கதையைக் கூறி இருப்பதாகவும் நேரம் வரும் பொழுது நடிகர் ஜெயம் ரவியை வைத்து அந்த திரைப்படத்தை நான் இயக்குவேன் என்றும் பிரதீப் ரங்கநாதன் கூறியிருந்தான்.

திரைப்படத்திற்கு பிறகு பிரதிப் ரங்கநாதன் இயக்கிய லவ் டுடே திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. திரையரங்குகளில் 100 நாள் வரை ஓடி சாதனை படைத்தது .அதேபோல் தற்பொழுது நடிகர் ஜெயம் ரவிக்கும் ரசிகர்கள் பட்டாலும் பெருகி வந்து கொண்டிருக்கும் இந்த நிலையில் இவர்கள் இருவருடைய இணைப்பில் ஒரு திரைப்படம் உருவானால் அது நிச்சயமாக மாபெரும் வெற்றி அடையும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Most Popular