Saturday, April 20, 2024
- Advertisement -
Homeசினிமாவிஜய்யின் வளர்ச்சி பிடிக்கலையா? ஜெல்சில் மருந்து குடிங்க.. பிரபல திரைப்பட விமர்சகர் காட்டம்

விஜய்யின் வளர்ச்சி பிடிக்கலையா? ஜெல்சில் மருந்து குடிங்க.. பிரபல திரைப்பட விமர்சகர் காட்டம்

- Advertisement -

நடிகர் விஜய்யின் வளர்ச்சி பிடிக்கவில்லை என்றால் வயிற்று எரிச்சலுக்கான மருந்தான ஜெல்சில் குடியுங்கள் என்று பிரபல திரைப்பட விமர்சகரான பிரசாந்த் ரங்கசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில் தான் வாரிசு திரைப்படம் நன்றாக இருக்கிறது என்று விமர்சனம் கொடுத்தேன். இந்த விமர்சனத்தில் எந்த தவறும் இல்லை என்று நான் நினைக்கிறேன்.
நான் அப்படி விமர்சனம் கொடுத்ததற்கு தற்போது நான் மகிழ்ச்சி அடைகிறேன் .

ஏனென்றால் என்னுடைய விமர்சனத்தை உண்மையாக்கும் வகையில் தற்போது குடும்பம் குடும்பமாக படம் பார்க்க மக்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். தற்போது வாரிசு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. தற்போது விஜயின் மார்க்கெட் மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருக்கிறது. தளபதி 67 திரைப்படத்திற்கு 500 கோடி ரூபாய் வியாபாரம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஒடிடி  உரிமத்திற்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் 10 ஆண்டுகளுக்கு நடிகர் விஜய் வளர்ந்து கொண்டு தான் இருப்பார். உங்களுக்கு விஜயின் வளர்ச்சி பிடிக்கவில்லை என்றால் வயிற்று எரிச்சல் மருந்தான ஜெல்சில்லை குடித்து கொள்ளுங்கள் என்று பிரசாந்த் ரங்கசாமி காட்டமாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் வாரிசு திரைப்படத்திற்கு தாம் பாசிட்டிவ் ரிவ்யூ கொடுத்ததற்காக தம்மை பலர் குறி வைத்து ஆன்லைனில் வசைப்படுவதாகவும், அந்த அளவிற்கு விஜயின் மீது சிலர் வன்மத்துடன் இருக்கிறார்கள் என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். எனினும் தம்முடைய பணியை  தொடர்ந்து செய்வேன் என்றும் திரைப்படத்தை திரைப்படமாக பார்த்து சண்டை போடாமல் இருக்க கற்றுக் கொள்ளுங்கள் என்றும் ரசிகர்களுக்கு அவர் அறிவுரை வழங்கி இருக்கிறார்.

விமர்சகர் பிரசாந்த் அண்ணாத்த திரைப்படத்திற்கு மோசமாக விமர்சனத்தை வழங்கிவிட்டு வாரிசு திரைப்படத்திற்கு பாசிட்டிவாக வழங்கியிருப்பதாக ரஜினி ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் அவர் நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சி தோல்வியில் முடிந்தது .தற்போது மற்ற நடிகர்கள் ரசிகர்கள் அவரை ஆன்லைனில் தாக்கி வருகின்றனர். இதனால் விரக்தி அடைந்த பிரசாந்த் இப்படி காட்டமாக பதிவிட்டுள்ளார்.

Most Popular