Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசினிமாஎன்னா மனுஷன்யா விஜய்.. தயாரிப்பாளர் பெருமிதம்.. அப்படி என்ன செய்தார் தெரியுமா.. ?

என்னா மனுஷன்யா விஜய்.. தயாரிப்பாளர் பெருமிதம்.. அப்படி என்ன செய்தார் தெரியுமா.. ?

செவன் ஸ்க்ரீன் தயாரிப்பாளார் லலித் குமார் லியோ படத்திற்குப் பின் பேட்டி அளித்து வருகிறார். அதில் அவர் படத்தின் இடையே நடந்த சம்பவங்களைப் பற்றி பேசியுள்ளார். அதில் விஜய் பற்றிய ஓர் சுவாரசியமான விஷயத்தைப் பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் செவன் ஸ்க்ரீன் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. விமர்சன ரீதியாக சற்று பின்னடைவை சந்தித்தாலும் வசூலில் பட்டையைக் கிளப்பி வருகிறது. முதல் நாள் முடிவில் 148 கோடிகளை உலகெங்கும் அள்ளியுள்ளது.

நிச்சயம் 500 கோடிகளை தாண்டும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. பொதுவாக எந்த ஒரு படமும் இத்தகு பெரிய வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் தயாரிப்பாளர் பணியாற்றுபவர்களுக்கு பரிசு வழங்குவது வழக்கம் ஆகிவிட்டது.

- Advertisement -

வெற்றிமாறன் தன் படம் வெற்றி பெற்ற மறு நொடியே அனைத்து பணியாளர்களுக்கும் நேரில் சென்று தங்கம் பரிசு அளிப்பார். விக்ரம் பட வெற்றியைக் கொண்டாட ஆண்டவர் கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு 60 லட்சம் மதிப்புள்ள கார் மற்றும் சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் ஒன்றைப் பரிசளித்தார்.

- Advertisement -

இதே தான் ஜெயிலர் படத்திற்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் செய்தது. இது போன்ற ஒரு சம்பவத்தை லலித் குமார் மாஸ்டர் படம் நிறைவுப் பெற்றபின் நடந்ததாக கூறினார். அதாவது மாஸ்டர் பட வெற்றிக்கு விஜய் சாருக்கு கார் பரிசாக வழங்குவதை படக்குழு திட்டமிட்டு விஜய்யிடம் கேட்டுள்ளது.

அதற்கு தளபதி விஜய் சிம்பிளான பதில் அளித்து anaivaraiy வாய்யடையச் செய்துள்ளார். அவர் கூறியதாவது, “ எதற்கு கார் பரிசாக கொடுக்கிறீர்கள் ? அதான் நான் நடித்ததற்கு சம்பளம் அளித்து விட்டீர்களே ” என்றுள்ளார். உண்மையில் அவர் சொன்னது சரியே. ஆனால் மாபெரும் வெற்றியை கொண்டாடும் விதத்தில் தயாரிப்பாளர்கள் இது போல செலவு செய்வது அவர்களது மனசே.

இருப்பினும் ஒப்பந்தத்தில் இல்லாததை அவர் வாங்காமல் செல்வது விஜய்யின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. லலித் குமார் கூறிய இந்தச் செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Most Popular