Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமாநான் ஜிகர்தண்டா - 3 பார்த்தேன்.. வழக்கம் போல் வித்தியாசமாக விமர்சனம் பதிவிட்டுள்ள பார்த்திபன்

நான் ஜிகர்தண்டா – 3 பார்த்தேன்.. வழக்கம் போல் வித்தியாசமாக விமர்சனம் பதிவிட்டுள்ள பார்த்திபன்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் தீபாவளியை முன்னிட்டு நேற்று திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 9 வருடங்களுக்கு முன் சித்தார்த் – பாபி சிம்ஹாவை வைத்து இயக்குனர் – கேங்ஸ்டர் கதையை உருவாக்கிய தமிழ் சினிமாவையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார் கார்த்திக் சுப்புராஜ்.

- Advertisement -

அந்தப் படத்தின் ப்ரீக்குலாக ஜிகர்தண்டா டபிள் எக்ஸ் உருவாகியுள்ளது. இதில் எஸ்.ஜே.சூர்யா இயக்குனராகவும் ராகவா லாரன்ஸ் கேங்ஸ்டர் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இருவரும் இணைந்து அமர்களபடுத்திவிட்டனர். எஸ்.ஜே.சூர்யா இருக்கும் படத்தில் அவரைத் தாண்டி சிறப்பாக நடித்துள்ளார் ராகவா லாரன்ஸ். தன் பேய் இமேஜை ஜிகர்தண்டா 2 மற்றும் என அவர் கூறியது மிகக் கச்சிதமாக அமைந்துள்ளது.

இந்தப் படத்தின் முதல் பாதி எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் இயக்கும் படத்தை சுற்றியே நகர்கிறது. இரண்டாம் பாதி அப்படியே வேறுபட்டு ஓர் புதிய உலகிற்கு அழைத்துச் சென்று நம்மை மெய் சிலிர்க்க வைக்கும். கடைசி அரை மணி நேரம் நம்மளை இது தான் உண்மையான சினிமா என உணர வைக்கும்.

- Advertisement -

இப்படத்தை நேற்று பார்த்த பார்த்திபன் தன் டிவிட்டர் கணக்கில் ஓர் பதிவை போட்டுள்ளார். அவர் குறிப்பிட்டதாவது, “ ஜிகர்தண்டா – 3 முதல் காட்சி பார்த்தேன் என என்றைக்காவது ஓர் நாள் நான் பதிவிடுவேன். தெரியாமல் பொய் பிடித்துவிட்டால் பேய். ஆனால் கார்த்திக் சுப்புராஜ் பேயை தெரிந்தே தானே போய் பார்க்கிறேன். நினைத்த படியே மனதை உலுக்கியது. நடித்த அனைவர்களும் யானை பலத்துடன் மிரட்டுகிறார்கள். மிரட்டும் யானைகளோ நம் கண்ணீரில் நீர்களை சுரக்க நடிக்கிறார்கள். ”

- Advertisement -

மேலும், “ ஜிகர்தண்டா 1இல் நான் நடித்திருக்க வேண்டியது. கார்த்திக் சுப்புராஜ் எனக்கு முன்னர் இருந்தே பழக்கம் என்பதில் மகிழ்ச்சி. தியேட்டர்களில் வெடித்த கைத்தட்டல்களை தீபாவளி பட்டாசுகளாக ரசித்தேன். ” என ருசிகரமான பதிவை போஸ்ட் செய்துள்ளார் பார்த்திபன்.

Most Popular