Tuesday, May 7, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமா32 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ரஜினி, அமிதாப் பச்சன்

32 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ரஜினி, அமிதாப் பச்சன்

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 170 ஆவது திரைப்படத்தை ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கிய ஞானவேல் எடுக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் இஸ்லாமிய போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார்.

- Advertisement -

இந்த படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் முதலில் விக்ரமை வில்லனாக நடிக்க வைக்க பேச்சு நடத்தப்பட்டது.

- Advertisement -

ஆனால் அது குறித்து இந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில் தற்போது அமிதாப்பச்சனை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க இயக்குனர் ஞானவேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முடிவெடுத்து வருவதாக தகவல் அண்மையில் வெளியானது.

- Advertisement -

இந்த நிலையில் நடிகர் ரஜினியும் இயக்குனரும் அமிதாப்பச்சனை தொடர்பு கொண்டு கதையை கூறியதாகவும், ரஜினியுடன் மீண்டும் நடிக்க அமிதாபச்சன் எந்த தயக்கமும் இன்றி ஓகே சொல்லிவிட்டதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் அமிதாப்பச்சனை தனது குரு என்று ரஜினிகாந்த் எப்போதுமே கூறி வருவார். இவர்கள் இருவரும் பல்வேறு படங்களில் இணைந்து நடித்தாலும் கடந்த 32 ஆண்டுகளாக இவர்கள் எந்த படத்திலும் சேர்ந்து நடிக்கவில்லை. இவர்கள் கடைசியாக நடித்த திரைப்படம் 1992 ஆம் ஆண்டு வெளியானமெகா ஹிட் திரைப்படம் ஹம்.

ஹம்மில் எடுக்கப்பட வேண்டிய ஒரு காட்சியை இயக்குனர் படத்தின் நீளம் கருதி தூக்கி விட்டதாகவும் ஆனால் அந்த காட்சி நடிகர் ரஜினிக்கு மிகவும் பிடித்த பொய் அந்த காட்சியை வைத்து தான் பாட்ஷா திரைப்படத்தையே உருவாக்கியதாகவும் பல்வேறு பேட்டிகளில் இயக்குனர் கிருஷ்ணா தெரிவித்திருக்கிறார்.

தனது தங்கச்சிக்கு சீட்டு வாங்க ரஜினி செல்லும் அந்த காட்சியை தான் ஹம்மில் எடுக்க இருந்தனர். அதை சுற்றி தான் பாட்ஷா திரைப்படமே உருவானது. இதனால் இருவரும் மீண்டும் நடிக்கிருப்பது பாலிவுட் கோலிவுட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Most Popular