Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசினிமாவிஜய், கமலுக்கு மறைமுக எச்சரிக்கை விட்ட ரஜினி.. கோர்த்துவிட்ட நெல்சன்

விஜய், கமலுக்கு மறைமுக எச்சரிக்கை விட்ட ரஜினி.. கோர்த்துவிட்ட நெல்சன்

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக பல ஆண்டு காலம் இருந்தவர் ரஜினி. ஆனால் கபாலி திரைப்படத்திற்கு பிறகு அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வசூலை பெறவில்லை.

- Advertisement -

இதற்கு காரணம் அவர் எடுத்த அரசியல் நிலைப்பாடு தான் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜய்,கமல் ஆகியோர்களின் திரைப்படங்கள் ரஜினியை விட அதிக வசூல்களை பெறுகின்றன.

இந்த நிலையில் ரஜினி நடித்த அண்ணாத்த படமும் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் எடுபடவில்லை. இதனால் நடிகர் ரஜினி ஜெயிலர் படத்தை தான் மிகவும் நம்பி இருக்கிறார். ரஜினி இடம் ஆட்டம் கண்டு விட்டது என்று பலரும் பேசி வருகின்றனர். இதனால் தமது இடம் எங்கேயும் போகவில்லை என்பதை தனது படத்தில் மூலம் நடிகர் ரஜினி மீண்டும் ஒருமுறை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஏற்கனவே 2.0 திரைப்படத்தில் இந்த நம்பர் ஒன், டூ எல்லாம் பாப்பா விளையாட்டு.நான் எப்போதுமே சூப்பர் ஒன் என்று கூறியிருந்தார்
தற்போது ஜெய்லர் திரைப்படத்தில் இந்த இடத்திற்கு நான் தான் கிங்.

- Advertisement -

நான் வைத்தது தான் ரூல்ஸ் என ரஜினி பேசி இருக்கிறார். இதன் மூலம் விஜய் கமல் ஆகியோர்களுக்கு ரஜினி மறைமுகமாக எச்சரிக்கை கொடுப்பது போல் வசனங்கள் இடம் பெற்று இருப்பதாக திரைத்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் நெல்சன் வேண்டுமென்றே மற்ற ரசிகர்களை எரிச்சல் அடைய செய்வதற்காகவே இது போன்ற வசனத்தை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.மேலும் ரஜினி சும்மா அடிக்கடி இது போன்ற வசனத்தை கூறுவதன் மூலம் உண்மையிலே அவருடைய முதல் இடம் பறிபோய்விட்டது.

இதனால் ஏற்பட்ட காயத்தினால் தான் ரஜினி சுய தம்பட்டம் அடித்துக் கொள்கிறார் என்று விமர்சனங்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.ஒரு சிலர் ஜெய்லர் படத்தில் ரஜினி அபார நம்பிக்கை வைத்திருப்பதாகவும் அதன் பேரில் தான் நம்பர் ஒன் இடத்தில் தான் இருக்கிறேன் என்று கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Most Popular