Tuesday, May 7, 2024
- Advertisement -
Homeசினிமா"இளம் நடிகையை மிரட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்".. நடந்தது என்ன ? - பத்திரிக்கையாளர் செய்யாறு...

“இளம் நடிகையை மிரட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்”.. நடந்தது என்ன ? – பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பேட்டி!

தமிழ் சினிமாவில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டார் ஆக இருந்து வருபவர் ரஜினிகாந்த். இவருக்கு திருமணமாகி லதா என்ற மனைவியும் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இவரது நடிப்பில் உருவான ஜெயிலர் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது . இதனைத் தொடர்ந்து லால் சலாம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரஜினி . இந்தத் திரைப்படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்து வருகின்றனர். இந்தத் திரைப்படத்தை சூப்பர் ஸ்டாரின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

- Advertisement -

இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கிய ஞானவேல் இயக்க இருக்கும் புதிய படத்தில் நடிகை இருக்கிறார் ரஜினி. சூப்பர் ஸ்டாரின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிக்கு நடிகர் தனுசு உடன் திருமணம் நடைபெற்றது . தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தங்களது 18 வருட திருமண வாழ்க்கையில் இருந்து கடந்த வருடம் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிந்து சென்றன.ர் அதன்பிறகு தனுஷ் தனது நடிப்பிலும் ஐஸ்வர்யா படங்களை இயக்குவதிலும் கவனம் செலுத்தி வருகின்றனர் .

இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் செய்த செயல் ஒன்று தற்போது பத்திரிகைகளில் வெளியாகி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது . இந்த சம்பவம் நடைபெறும் போதே பத்திரிகைகள் வெளிவந்ததும் குறிப்பிடத்தக்கது . இது போன்ற பிரச்சினைகளில் சூப்பர் ஸ்டார் நேரடியாகவே தலையிட்டது திரையுலகினர் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது . இது தொடர்பாக பலரும் அவருக்கு கண்டனங்களும் தெரிவித்திருந்தனர் . சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இது போன்ற ஒரு செயலில் ஈடுபடுவார் என்று திரையுலகினர் யாருமே எதிர்பார்க்கவில்லை .

- Advertisement -

இந்த சம்பவத்தை பற்றி மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு தற்போதைய பேட்டி ஒன்றில் வெளியிட்டிருக்கிறார் . அவரது தகவல்களின்படி விஐபி திரைப்படத்தின் போது தனுஷ் மற்றும் அமலாபால் இடையே நெருக்கமான உறவு இருந்திருக்கிறது . இதன் காரணமாக தனுஷ் மாதக் கணக்கில் தனது வீட்டிற்கு செல்லாமல் அமலா பால் உடனே எப்பொழுது களித்திருக்கிறார் . இதனால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார் . இதனைக் கண்டு அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த ரஜினி நேரடியாக அமலாபால் தங்கி இருந்த வீட்டிற்க்கே சென்றுள்ளார் . அங்கு சென்று அமலாபாலிடம் தனது மகளின் கணவரை விட்டு விடுமாறு கேட்டு இருக்கிறார் . மேலும் என்னுடைய இன்னொரு முகம் இருக்கிறது அதை பார்த்து விடாதே என எச்சரிக்கையும் கொடுத்துள்ளார் .

- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அமலாபால் வீட்டிற்கு சென்று அவருக்கு மிரட்டல் கொடுத்த சம்பவம் திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . பலரும் இதற்கு கண்டனங்கள் தெரிவித்து வந்தனர் . ரஜினி அவரது மருமகன் தனுஷை தான் கண்டித்திருக்க வேண்டும் அதை விட்டு அமலா பாலை மிரட்டியது எந்த விதத்தில் நியாயம் என பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர் . இந்த சம்பவத்தை தான் தற்போது செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் . மேலும் விஐபி திரைப்படத்திற்கு பிறகு அமலா பாலின் தமிழ் மார்க்கெட்டே கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தது . இதற்குப் பின்புறமாக யார் இருக்கிறார்கள் என்று உண்மை இதுவரை வெளியாகவில்லை அந்த சம்பவங்களுக்குப் பிறகு அமலா பாலுக்கு தமிழில் யாருமே படம் நடிக்க வாய்ப்புகள் கொடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

Most Popular