Sunday, September 15, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாஇப்படி ஏமாந்து போய்ட்டாரே ராஷ்மிகா மந்தானாக்கு நிகழ்ந்த சோகம்

இப்படி ஏமாந்து போய்ட்டாரே ராஷ்மிகா மந்தானாக்கு நிகழ்ந்த சோகம்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளும் ஒருவராக வலம் வருபவர் நடிகை ராஸ்மிகா மந்தானா. இவர் தெலுங்கில் பிரபலமாக இருந்தாலும் தமிழ் சினிமாவில் இவருக்கென்று ஒரு தனி இடம் உண்டு. அதன் காரணத்தினால் தான் இவரை நேஷனல் கிரஸ் என்று கூறுகிறார்கள்.

- Advertisement -

இவர் முதல் முதலில் கன்னட திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமானார். இவர் நடித்த கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு திரைப்படம் தமிழிலும் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படத்தின் மூலம் தனக்கென்று பல ரசிகர்களை குவித்தார் நடிகை ராஷ்மிகா.

இதைத்தொடர்ந்து இவர் தெலுங்கில் நிறைய திரைப்படங்களை நடித்து வந்தார். இவர் முதல் முதலில் தமிழில் நடித்த திரைப்படம் என்றால் நடிகர் கார்த்திக் உடன் நடித்த சுல்தான் என்ற திரைப்படம் ஆகும். இதற்குப் பிறகு நடிகை ராஷ்மிகா தளபதி விஜய் உடன் வாரிசு திரைப்படத்தில் நடித்தார்.

- Advertisement -

இது இரண்டும் தான் இவர் தமிழில் நடித்த திரைப்படங்கள் ஆகும். நடிகர் அல்லு அர்ஜுனின் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படத்தின் கதாநாயகியாக நடிகர் ராஷ்மிகா நடித்திருந்தார் இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என்று பான் இந்தியின் மொழிகளில் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படத்தில் நடித்த ராஸ்மிகா மந்தனாவிற்கு எல்லா மொழிகளிலும் ரசிகர்கள் கிடைத்து விட்டார்கள்.

- Advertisement -

இப்படி பிரபலமடைந்த நடிகை ராஸ்மிகா தற்பொழுது புஷ்பா திரைப்படத்தின் இரண்டாவது பாகத்திலும் நடித்து வருகிறார் .மேலும் ஹிந்தியில் அனிமல் என்ற திரைப்படத்திலும், தெலுங்கில் ரெயின்போ என்ற திரைப்படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படி சினிமா உலகில் பிஸியாக இருக்கும் நடிகை ராஸ்மிகாவின் சொந்த வாழ்வில் தற்பொழுது ஒரு ஏமாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இவரிடம் பணி செய்யும் ஒரு மேனேஜர் இவரிடம் இருந்து 80 லட்சம் மோசடி செய்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. அதன் காரணத்தினால் அவரை பணிநீக்கம் செய்ததாகவும் கூறுகிறார்கள் .

இதைப் பற்றி எந்த விதமான செய்தியும் நடிகை ராஷ்மிகா கூறவில்லை. அந்த மேனேஜர் ராஷ்மிகாவிடம் நீண்ட காலமாக பணி செய்யும் ஆள் என்பதன் காரணத்தினால் பேச்சுவார்த்தையோடு நீக்கிவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

ஒரு காரணத்தினால் அவர் மீது எந்தவித புகார் நடிகை ராஷ்மிகா கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இப்படிப் பரவி வரும் இந்த செய்தி உண்மையா பொய்யா என்பதை நடிகை ராஷ்மிகா கூறினால் மட்டுமே தெளிவடையும்.

Most Popular