Friday, May 3, 2024
- Advertisement -
Homeசினிமாமேடம் இது KGF 3! சலாரை நம்பி ஏமாந்த் ரசிகர்கள்..பிரபாசை காப்பாறினாரா நீல்?

மேடம் இது KGF 3! சலாரை நம்பி ஏமாந்த் ரசிகர்கள்..பிரபாசை காப்பாறினாரா நீல்?

22 6 2023 ஆன இன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருக்கும் நடிகர் பிரபாஸ் நடித்த சலாம் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பல வகையான விமர்சனங்களும் கருத்துக்களும் எழுந்திருக்கிறது.

- Advertisement -

திரைப்படத்தைப் பார்த்த மக்கள் தங்களின் கருத்துக்களை பல்வேறு விதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு பிரபாஸ் பெருமளவில் நம்பி நடித்திருக்கும் திரைப்படம் என்றால் அது சலார் திரைப்படம் தான்.

கேஜிஎப் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இந்த திரைப்படத்தை ட்ரெய்லரை பார்த்து விட்டு கேஜிஎப் போல் இருக்கும் என்று பலரும் நினைத்துக் கொண்டு திரையரங்கிற்கு வந்ததாக கூறுகிறார்கள். ஆனால் கே ஜி எஃப் இருக்கும் சல்லாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை திரைப்படம் பார்த்தவர்கள் கூறியிருக்கிறார்கள்.

- Advertisement -


படத்தைப் பார்த்த அனைவருமே பொதுவாக சொன்ன ஒரு கருத்து என்றால் அது இது ஜெனரல் ஆடியன்ஸ்களுக்கு பிடிக்காது என்றும் சூப்பர் ஹீரோ போன்ற படங்களை பார்க்கும் ரசிகர்களுக்கு தான் மிகவும் இந்த திரைப்படம் பிடிக்கும் என்றும் கூறியிருந்தார்கள்.

- Advertisement -

திரைப்படம் முழுவதும் பிரபாஸிற்கு அதிகமான பிடப்புகளை கொடுப்பதுடன் ஒரே ஆள் 6வது பெயரை ஒரே அடியில் தூக்கி வீசுவது போன்று எல்லாம் மாசான சீன்களை வைத்திருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். இதுவெல்லாம் எல்லாருக்கும் பிடிக்காது. கொஞ்சம் ஆவது லாஜிக் வேண்டும் என்றெல்லாமும் கூறி வருகிறார்கள்.

பிரபாஸிற்கு ஹைப்பையும் வெல் டப்பிங் கொடுக்கும் சீன்கள் எல்லாம் ஒரு சிலர் ரசித்தாலும் பலரும் விமர்சித்து வருகிறார்கள். ஆனால் இது திரைப்படம் முழுவதும் அதிகமான சண்டை காட்சிகள் இடம் பிடித்திருப்பதாகும் கூறுகிறார்கள்.அதே போல் இந்த திரைப்படத்தில் எதை விட்டாலும் கிளைமாக்ஸ் பார்க்க தவற விட்டு விடக்கூடாது என்பதை ஆணித்தனமாக அத்தனை ரசிகர்களும் கூறுகிறார்கள்.

ஏனென்றால் அப்படி ஒரு ட்விஸ்ட்டை கிளைமாக்ஸ் வைத்திருக்கிறார்களாம் அந்த கிளைமாக்ஸ் பார்த்த பிறகு பார்ட் 2 எப்பொழுது வெளியாகும் என்ற ஆர்வம் அனைவருக்கும் ஏற்படும் என்றும் கூறியிருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக பாகுபலி முதல் பாகத்தில் அமரேந்திர பாகுபலி கொண்டது கட்டப்பா ஏன் கொன்றார் என்ற கேள்விக்குறியுடன் முதல் பாகம் முடிவடைந்ததால் தான் இரண்டாவது பாகம் பலரின் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி வெற்றியடைந்தது.

அதுபோன்ற ஒரு சூட்சமத்தை தான் இயக்குனர் பிரசாந்த் நீல் சலாம் திரைப்படத்தில் கையாண்டு இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

அதேபோல் இத்திரைப்படத்தின் பிரித்விராஜுக்கும் ஒரு முக்கிய கதாபாத்திரம் இருப்பதாகவும் அவரும் ஒரு நல்ல முறையில் நடித்திருக்கிறார் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால் திரைப்படத்தின் பிஜிஎம் எதிர்பார்த்து அளவிற்கு இல்லை என்றும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.


ஒட்டுமொத்தமாக திரைப்படத்தைப் பற்றி கூற வேண்டும் என்றால் கேஜிஎப் அளவிற்கு இத்திரைப்படம் இல்லை. ஆனாலும் மாஸாக இருக்கிறது பிரபாஸ் திரைப்படத்தின் மூலம் மீண்டும் கம் பேக் கொடுத்து இருக்கிறார் என்பதுதான் ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

Most Popular