Friday, May 3, 2024
- Advertisement -
Homeசினிமாஹீரோவை அறைந்த டி.ராஜேந்திரன்.. பெண்களை தொட மாட்டார் - சந்தாணம் கலகல

ஹீரோவை அறைந்த டி.ராஜேந்திரன்.. பெண்களை தொட மாட்டார் – சந்தாணம் கலகல

டி ராஜேந்திரன் உடன் நடித்த அனுபவம் குறித்து நடிகர் சந்தானம் அளித்துள்ள பேட்டி தற்போது வைரல் ஆகிய வருகிறது. சந்தானம் திரையுலகில் முதன்முதலாக நடித்த திரைப்படம் என்றால் அது காதல் அழிவதில்லை தான்.

- Advertisement -

இந்த படத்தில் டி ராஜேந்திரன் தான் இயக்கி இருந்தார். இந்த நிலையில் சிம்பு படத்தில் சந்தானம் நடிக்க தொடங்கி பிரபலமான நிலையில் ஒருநாள் சந்தானத்திற்கு டி ராஜேந்திரன் போன் செய்தாராம்.

சிம்பு படத்தில் மட்டும் தான் நடிப்பாயா என்னோட படத்தை எல்லாம் அடிக்க மாட்டாயா என கேட்டவுடன். அப்படி எல்லாம் இல்லை நீங்க சொல்லுங்கள் நான் டேட் தருகிறேன் என்று கொடுத்தாராம் சந்தானம். இதன் பின்னர் சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

- Advertisement -

வீராசாமி திரைப்படத்தில் ஒரு மும்பை ஹீரோவும் ஹீரோயினும் டூயட் பாடுவது போல் பாடல் காட்சி. ஆனால் ஹீரோ சரியாக நடிக்கவில்லை என்று கோபத்தில் இருந்த டி ராஜேந்திரன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த நீச்சல் குளத்தில் குதித்து நீந்தி வந்து ஹீரோவை ஓங்கி இரண்டு அரை விட்டாராம்.

- Advertisement -

மேலும் ஹீரோயின் எப்போதும் தொடாத டி ராஜேந்திரன், சந்தானத்தை அழைத்து பிடித்து இப்படி செய் அப்படி செய் என்று சொல்லிக் கொடுத்தாராம். அந்த காட்சி முடியும் வரை டி ராஜேந்திரன் தன் மீதான தண்ணீரை துடைக்கவே இல்லையாம்.

மேலும் டி ராஜேந்தர் தம்மை ஒரு முறை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல இருக்கிறேன் என்று கூறியதாகவும் அதை நம்பி நான் சென்றால் இது ஏப்ரல் ஒன் உன்னை ஏமாற்ற தான் இப்படி செய்தேன் என்று கூறியதாகவும் சந்தானம் தெரிவித்தார்.

தமக்குப் பெரிய வாய்ப்பு கொடுத்தது சிம்பு என்றாலும் முதலில் என்னை நடிக்க வைத்தது டி ராஜேந்திரன் தான் என்றும் சந்தானம் கூறியுள்ளார்.டி ராஜேந்திரன் எடுக்க இருந்த ஒரு படத்தில் ஒரு நடிகன் சந்தானமாகவே நான் நடிக்க இருந்தேன். ஆனால் அந்த படம் எடுக்க முடியாமல் போய்விட்டது என்றும் சந்தானம் கூறியிருந்தார். தாம் மதிக்கும் திறமை வாய்ந்த கடும் உழைப்பாளி டி ராஜேந்திரன் தான் என்றும் சந்தானம் பாராட்டினார்.

Most Popular