Friday, May 3, 2024
- Advertisement -
Homeசினிமாகடவுள் பெயரில் அரசியல் செய்வது தவறு.. வெளிப்படையாக பேசிய நடிகர் சந்தானம்...!

கடவுள் பெயரில் அரசியல் செய்வது தவறு.. வெளிப்படையாக பேசிய நடிகர் சந்தானம்…!

நகைச்சுவை நடிகர் சந்தானம் நடிப்பில் கடந்த 2ஆம் தேதி வெளிவந்த வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது.

- Advertisement -

இதற்கு முன்பு நடிகர் சந்தானம் நடித்த டிக்கிலோனா திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் கார்த்திக் யோகி தான் இந்த வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தையும் இயக்கி இருக்கிறார். அந்த திரைப்படத்தின் கதாநாயகியாக என்னை நோக்கி பாயும் தோட்டா ,வந்தா ராஜாவா தான் வருவேன் போன்ற திரைப்படத்தில் நடித்த நடிகை மேகா ஆகாஷ் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தத் திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து இத்திரைப்படத்தின் வெற்றி விழா தற்பொழுது நடைபெற்றது .அதில் பேசிய நடிகர் சந்தானம் இந்த திரைப்படம் கூறிய கருத்து என்னவென்றால் கடவுளின் பெயரை வைத்து பணம் சம்பாதிக்க கூடாது அதைப்போல்  கடவுளின் பெயரை வைத்து அரசியல் செய்யவும் கூடாது என்பதுதான் இந்த திரைப்படத்தின் கருத்து என்று கூறினார் நடிகர் சந்தானம்.

- Advertisement -

இந்தத் திரைப்படத்தை ஆன்மீகவாதியாக இருப்பவர்கள் பார்த்தால் இதை சாமி படம் என்பார்கள் .நாத்திகவாதிகள் பார்த்தால் இதை பகுத்தறிவை பற்றி கூறிய திரைப்படம் என்று கூறுவார்கள் .இதுதான் வித்தியாசம். நான் ஒரு ஆன்மீகவாதி தான் என்பதையும் குறிப்பிட்டு இருந்தார் நடிகர் சந்தானம்.

- Advertisement -

மேலும் இந்தத் திரைப்படத்தின் இயக்கிய இயக்குனருக்கு கார்த்திக்  யோகி உடன் இன்னும் ஒரு திரைப்படம் நடிக்கப் போவதாகவும் கூறினார் நடிகர் சந்தானம். அந்தத் திரைப்படத்திற்கும் நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் டயலாகை தான் படத்தின் டைட்டிலாக வைக்கப் போவதாக கூறியிருக்கிறார் நடிகர் சந்தானம்.

Most Popular