Sunday, April 28, 2024
- Advertisement -
Homeசினிமாதிருமண வாழ்க்கை குறித்து நடிகர் சரத்குமாரின் முதல் மனைவி கூறிய செய்தி.. இவர்கள் பிரிந்ததற்கு இதுதான்...

திருமண வாழ்க்கை குறித்து நடிகர் சரத்குமாரின் முதல் மனைவி கூறிய செய்தி.. இவர்கள் பிரிந்ததற்கு இதுதான் காரணம்..?

தமிழ் சினிமாவின் சுப்ரீம் ஸ்டார் என்று புகழுக்குரியவர் நடிகர் சரத்குமார் .இவர் 1986 இல் இருந்து தன்னுடைய சினிமா பயணத்தை துவங்கிவிட்டார் . ஆரம்பத்தில் துணை நடிகராக இருந்த நடிகர் சரத்குமார் நாளடைவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார்.

- Advertisement -

தமிழ் ,தெலுங்கு என 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களை நடித்திருக்கிறார் நடிகர் சரத்குமார் அதேபோல் 10 திரைப்படங்களுக்கு மேல் தயாரித்தும் இருக்கிறார். நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராகவும் இருந்திருக்கிறார் நடிகர் சரத்குமார் .இவர் தற்பொழுது அரசியல்வாதியாகவும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி எல்லா துறையிலும் திறமை  வாய்ந்த நடிகர் என்றால் அது நடிகர் சரத்குமார் தான். இது எல்லாவற்றையும் விட இவர் அதிக முக்கியத்துவம் கொடுப்பது பிட்னஸ் என்று சொல்லப்படும் உடல் அமைப்பிற்கு தான். ஏறத்தாழ 50 வருடங்களாக உடற்பயிற்சி செய்து தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதாக சமீபத்தில் ஒரு பேட்டில் கூட குறிப்பிட்டிருந்தார் நடிகர் சரத்குமார். இதனால் இவர் மிஸ்டர் மெட்ராஸ் என்ற பட்டம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் 1984 இல் சாயா என்பவரை நடிகர் சரத்குமார் திருமணம் செய்து கொண்டார் நடிகர் சரத்குமார் மற்றும் சாயா தம்பதியினருக்கு பிறந்தவர் தான் தற்பொழுது நடிகராக இருக்கும் வரலட்சுமி சரத்குமார்.

- Advertisement -

இவர்கள் இருவரும் 2000 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர் இதற்குப் பிறகு 2001 ஆம் ஆண்டு நடிகை ராதிகாவை நடிகர் சரத்குமார் திருமணம் செய்து இன்றுவரையில் சிறந்த இல்லறத்தை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் சரத்குமாரின் முதல் மனைவி சாயா ஒரு பெட்டியில் திருமணத்தைக் குறித்து ஒரு செய்தியை கூறியிருந்தார்.

திருமணம் என்பது ஒருநாள் கூத்து அல்ல. ஒருவர் திருமணம் செய்து கொள்வதற்கு அவர் எல்லா நிலையிலும் உயர்ந்து இருக்க வேண்டும் .அதற்கான தகுதியை பெற்ற பின்பு தான் திருமணத்தை செய்து கொள்ள வேண்டும்.

இந்த காலகட்டத்தில் பலரும் உடல் தேவைக்காகவே திருமணம் செய்து கொள்கிறார்கள் .ஆனால் திருமணம் என்பது அதுவல்ல இது போன்ற மனநிலையில் திருமணம் செய்து கொண்டால் அது விவாகரத்தில் தான் போய் முடியும் என்று தன் சொந்த அனுபவத்தை அறிவுரையாக பிறர்க்க கூறி இருக்கிறார் சரத்குமாரின் முன்னாள் மனைவி சாயா.

Most Popular