சினிமா

ஷாரூக்கானுடன் இணையும் விஜய்.. அவதார் பட பாணியில் திரைப்படம் எடுக்கும் ஷங்கர்

இந்திய சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் ஒரு காலத்தில் ஷங்கரை தான் அனைவரும் சொல்வார்கள். ஆனால் தற்போது அந்தப் பெயரை ராஜமவுலி தட்டி சென்று விட்டார். அடுத்தடுத்து ராஜமவுலி இயக்கிய படங்கள் பெரும் அளவு சாதனைகளை படைத்து உள்ளது.

Advertisement

இந்த நிலையில் மீண்டும் சங்கர் தனது பிரம்மாண்ட கனவு திரைப்படங்களை எடுக்க முடிவெடுத்துள்ளார். அதன்படி அவதார் வே ஆஃப் வாட்டர், ஆக்குவா மேன் போன்ற படங்களில் வருவது போல் முழுக்க முழுக்க தண்ணீருக்கு அடியில் நடைபெறும் கதை ஒன்றை இயக்குனர் சங்கர் எழுதியுள்ளார். இது இந்திய சினிமாவில் அதிக பட்ஜெட் கொண்ட திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இதற்கு ஆரம்பக்கட்ட தொகையாக 900 கோடி ரூபாய் தேவைப்படும் என கருதப்படுகிறது. இதனால் இந்த படத்தில் பெரிய சூப்பர் ஸ்டார் வைத்து இயக்க சங்கர் திட்டமிட்டுள்ளார். இதில் முதல் கட்டமாக தமிழ் நடிகர் விஜய்யும், பாலிவுட் நடிகர் ஷாருக்கானையும் வைத்து இந்தப் படத்தை இயக்க சங்கர் முடிவெடுத்துள்ளார்.இதற்காக ஷாருக்கான் மற்றும் விஜய்யிடம் பேசப்பட்டதாகவும் அவர்கள் இருவருக்கும் இந்த கதை பிடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

எனினும் படத்தின் பட்ஜெட் படத்தை எப்போது எடுப்பது போன்ற பணிகள் குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. சங்கர் தற்போது இந்தியன் டு மற்றும் ராம்சரணை வைத்து தெலுங்கு திரைப்படம் ஆகியவற்றை எடுத்து வருகிறார். அது எல்லாம் முடிந்த பிறகு தனது கனவு திரைப்படமான தண்ணீருக்குள் நடக்கும் கதையை  ஷங்கர் திட்டமிட்டுள்ளார்.

இதேபோன்று ஹாலிவுட்டில் ஏற்கனவே நிறைய வந்துவிட்டதால் இயக்குனர் சங்கர் வேறு ஒரு கதைகளத்தை கொண்டு பிரம்மாண்டமாக செய்யலாம் என்று சினிமா ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த செய்தி ஒருவேளை உண்மையாக நடந்தால் ஷாருக்கான் விஜய் ஆகியோரை நாம் ஒரே திரையில் பார்க்கலாம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top