Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசினிமாஇந்தியன் 2 படத்துக்குப் பின் ரூ.1000 கோடி பட்ஜெட்டில் இயக்குனர் ஷங்கரின் கனவு படம் !...

இந்தியன் 2 படத்துக்குப் பின் ரூ.1000 கோடி பட்ஜெட்டில் இயக்குனர் ஷங்கரின் கனவு படம் ! டாப் ஹீரோக்கள் நடிக்க ஒப்பந்தம்

தமிழ் சினிமாவில் மிக பிரம்மாண்டமான திரைப்படங்களை இயக்குபவர் என்ற பெருமையைப் பெற்றவர் இயக்குனர் ஷங்கர். 2009 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 150 கோடி ரூபாய் செலவில் எந்திரன் திரைப்படத்தை இயக்கி, அப்போதைக்கு அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்திய திரைப்படம் என்ற சாதனையை ஷங்கர் படைத்தார். இதனை தொடர்ந்து 2.0 திரைப்படத்தை சுமார் 500 கோடி ரூபாய் செலவில் இயக்குனர் ஷங்கர் உருவாக்கி , கடந்த 2018 ஆம் ஆண்டு 3டியில் வெளியிட்டார். ஒரு சின்ன பாடலில் ஒரு சிறிய காட்சிக்காக கோடிக்கணக்கில் செலவு செய்யும் இயக்குனர் ஷங்கர், தற்போது தமிழில் இந்தியன் 2 திரைப்படமும் தெலுங்கில் ராம்சரனை வைத்து ஒரு திரைப்படமும் எடுத்து வருகிறார்.

- Advertisement -

இந்தியன் 2 திரைப்படம் சில பிரச்சனைகளால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது அந்தப் படம் மீண்டும் தொடங்க இருக்கிறது. இயக்குனர் ஷங்கர் ராம்சரனை வைத்து எடுத்து வரும் திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் கேரா அத்வானி ஜோடியாக நடிக்கிறார் . தற்போது மெகா பட்ஜெட்டுகளை வைத்து மிகப்பிரமாண்டமாக ராஜமெளலி , பாகுபலி போன்ற படங்களை எடுத்து இந்தியாவின் நம்பர் ஒன் இயக்குனர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். இதனால் இயக்குனர் ஷங்கரும் தனது கனவு திரைப்படத்தை இயக்கி மீண்டும் முதலிடம் பிடிப்பதற்கான வேலையில் இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது .

இதில் இயக்குனர் ஷங்கர் ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒரு கதையை தயாரித்துள்ளார் . இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் , தெலுங்கு நடிகர் ராம்சரண் ஆகியோர் நடித்த உள்ளனர். தண்ணீருக்கு அடியில் ஹாலிவுட் தரத்தில் ஆக்வாமேன் திரைப்படம் போல் இது உருவாக உள்ளது. ராம்சரண் 15 , இந்தியன் 2 திரைப்படத்திற்கு பிறகு இதற்கான பணிகளை ஷங்கர் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் தமிழ் நடிகர்கள் இடம்பெறுகிறார்களா என்ற தகவல் வெளியாகவில்லை.

- Advertisement -

தமிழில் நடிகர் சங்கருக்கு போதிய ஆதரவு இல்லாததால் அவர் மற்ற மொழிகளில் சென்று படங்களை இயக்கத் தொடங்கி விட்டார். இது தமிழக ரசிகர்களிடையே ஏமாற்றத்தை தந்துள்ளது. இயக்குனர் ராஜமெளலி தெலுங்கில் டாப் 2 நடிகர்களை வைத்து ஆர் ஆர் ஆர் எடுத்து இந்தியா முழுவதும் பிரபலமாகும் போது , ஷங்கர் ஏன் தமிழில் உள்ள டாப் நடிகர்களை வைத்து படங்களை இயக்கக் கூடாது என்று ரசிகர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்தியன் 2 திரைப்படம் வெற்றி பெற்றால் மீண்டும் இயக்குனர் ஷங்கர் தமிழுக்கு வர வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

Most Popular