Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசினிமாரெட் கார்டு விவகாரத்தில் சிம்பு விஷால் பற்றி தப்பான செய்திகள்.. ! உண்மையில் நடந்தது என்ன.....

ரெட் கார்டு விவகாரத்தில் சிம்பு விஷால் பற்றி தப்பான செய்திகள்.. ! உண்மையில் நடந்தது என்ன.. ?

தமிழ் சினிமாவின் தயாரிப்புச் சங்கத்தின் பொதுக்குழுவில் இருந்து அரைகுறையாக கசிந்த தகவல் சில ரசிகர்கள் மத்தியில் ஷாக்கை உண்டாக்கியது. தயாரிப்பாளர்கள் சந்திப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பணத்தை வாங்கிக் கொண்டு ஒப்பந்தம் செய்யப்பட்ட படத்தில் நடிக்காமல் தயாரிப்பாளர்களுக்கு நஷ்ட்டத்தை கொடுக்கும் நடிகர்கள் சிலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு அவர்கள் மேல் ஆக்க்ஷனும் எடுகப்படுதவாக சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

- Advertisement -

அந்த நடிகர்களின் பட்டியல் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. ஆனால் இரு தினங்களுக்கு முன் அந்த நடிகர்கள் சிம்பு, விஷால், எஸ்.ஜே.சூர்யா, அதர்வா மற்றும் யோகி பாபு எனச் செய்திகள் பரவின. தற்போது இந்தப் பட்டியலில் சிம்பு மற்றும் விஷாலின் பெயர் இல்லை என அதிகாரபூர்வமாக கூறியுள்ளனர். சில யூடியூப் சேனனல்கள் தங்களின் நலனுக்காக அவதூறான செய்திகளை பரப்புவதாக அந்தந்த நடிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சிம்பு ரெட் கார்ட் வரலாறு

சில ஆண்டுகளுக்கு முன்பு படங்களில் நடிப்பதாக கூறி பேசிய பணத்தை மட்டும் வாங்கிக் கொண்டு தயாரிப்பாளர்களுக்கு டிமிக்கி குடுத்தவர் சிம்பு. அதோடு ஸ்கிரிப்ட்டில் இயக்குனரையே குறை கூறி பலவற்றை மாற்றி படத்தையே நாசமும் ஆக்கியுள்ளார். அப்படம் தான் ‘ அண்பானவன் அடங்காதவன் அசராதவன் ’ ஆகும். பின்னர் வெங்கட் பிரபுவின் மாநாடு படமும் இதே பிரச்சினையைத் தான் சந்தித்தது. அதனால் அவருக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டு அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ” எனக்கா ரெட் கார்டு ” எனப் பாட்டுப்பாடி தன் எதிர்பார்ப்பைக் காட்டினார் சிம்பு.

- Advertisement -

அதோடு சிம்பு உடல் எடையும் கூடிய அக்காலத்தில் மிகவும் மெத்தனமாக இருந்தார். அவருக்கு பல்வேறு எதிர்ப்புகள். இது அனைத்தையும் அவர் நிதானமாக இருந்து தன் உழைப்பால் மாற்றினார். அன்று வில்லனாக பார்க்கப்படும் சிம்பு இன்று அனைவரும் கண்ணுக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார். சிக்கல்கள் அனைத்திலும் இருந்து வெளியே வந்து மாநாடு படத்தை நிறைவு செய்து மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுத்தார்.

- Advertisement -

பொய்யான ரெட் கார்டு செய்தி

சிம்புவின் பழைய ரெட் விவகாரத்தை வைத்துக் கொண்டு மீண்டும் அவரின் மேல் வீணாக சிலர் வேண்டுமென்றே பழி போட்டுள்ளார்கள். அதோடு நடிகர் விஷாலின் பெயரும் தப்பாக சிலர் பரப்பியுள்ளதாக அவரிடம் தெரிவித்துள்ளார். சிம்பு மற்றும் விஷாலின் மீது வன்மத்தைக் கக்கவே ஓர் கூட்டம் உள்ளது.

ரெட் கார்டு நடிகர்களுக்கு என்ன தண்டனை

அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்த மீது மூன்று நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, அதர்வா, யோகி பாபு பற்றி என்னவென்று தெரியவில்லை. உண்மையாகவே அவர்கள் இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம். ஆனால் இதுவரை தயாரிப்பு சங்கத்திலிருந்து எந்த ஒரு பட்டியலும் வரவில்லை. சங்க உறுப்பினர்கள் இந்த விஷயத்தை வெளியில் சொல்லாமல் அவர்களுக்குள்ளேயே சுமூகமாக முடித்துக் கொள்ளவிருப்பதாக இருக்கின்றனர்.

Most Popular