சினிமா

21 வருடங்கள் கழித்து விஜய் படத்தில் பாடும் பிரபல பாடகி ! வெளியாகிறது வாரிசு 3வது பாடல் !

பொங்கலுக்கு தமிழ் சினிமாவின் இரு ஜாம்பவான்கள் 8 வருடங்கள் கழித்து மோதுகின்றனர். விஜய் & அஜித் இருவரின் படங்களும் இறுதிகட்டப் பணிகளில் உள்ளது. இடையே அவ்வப்போது அப்டேட்கள் அளித்து ரசிகர்களின் விறுவிறுப்பை மேலும் உயர்த்தியும் வருகின்றனர்.

ஹெச்.வினோத் இயக்கும் துணிவு படத்தில் இருந்து கிப்ரான் இசையமைத்த இரு பாடல்கள், சில்லா சில்லா மற்றும் காசேதான் கடவுளடா இதுவரை ரிலீஸ் ஆகியுள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி பாட்டு ஓர் கெத்தானா பாட்டாகாவும் அதில் அஜித்குமார் அவர்கள் மிகவும் வித்தியாசமாக ரசிகர்கள் எதிர்பார்த்தபடி இருப்பார் என படக்குழு தெரிவித்துள்ளது.

Advertisement

மறுபக்கம் வாரிசு படக்குழுவும் இதுவரை ரஞ்சிதமே மற்றும் தீ தளபதி என இரு பாடல்களை வெளியிட்டுள்ளது. மூன்றாவது பாட்டான ‘ இட்ஸ் ஃபார் யூ அம்மா ’ நாளை மாலை 5 மணிக்கு வரும் என தயாரிப்பு நிறுவனம் பதிவிட்டுள்ளது.

சோல் ஆப் வாரிசு எனும் ஹாஸ்டாக் பாட்டுத் தலைப்பின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது. தமன் இசையமைத்துள்ள இப்பாட்டிற்கும் விவேக்கே பாடல் வரிகளை செதுக்கியுள்ளார். ஏற்கனவே இப்படத்தில் அவர் எழுதிய 2 பாடல்களுக்கும் ரசிகர்களிடம் இருந்து அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

Advertisement

இப்பாட்டில் இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் பாடகி சித்ரா 21 வருடங்கள் கழித்து நடிகர் விஜய்யின் படத்தில் பாடுகிறார். கடைசியாக பத்ரி படத்தில் ‘ ஏஞ்சல் வந்தாலே ’ எனும் பாடலைப் பாடினார், அதற்குப் பிறகு இப்போதுதான்.

இந்த ஆண்டு வந்த வலிமை படம் அம்மா செண்டிமட்டில் சற்று தவறியது. விஜய் ரசிகர்கள் அதை கலாய்த்துத் தள்ளினர். தற்போது தளபதி விஜய் படத்தில் அம்மா பற்றிய பாடல் வரவுள்ளதால் வாங்கிய கேளிகளை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் திருப்பித் தந்து வருகின்றனர்.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top