Friday, May 3, 2024
- Advertisement -
Homeசினிமாநடிகை திரிஷாவிற்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நேரடியாக ப்ரபோஸ் செய்த பிரபல பாடகர்... த்ரிஷாவின் பதில் என்ன...?

நடிகை திரிஷாவிற்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நேரடியாக ப்ரபோஸ் செய்த பிரபல பாடகர்… த்ரிஷாவின் பதில் என்ன…?

தமிழ் சினிமாவில் 40 வயதிலும் கதாநாயகியாக நடிக்கும் தகுதியுடைய ஒரே நடிகை என்றால் அது த்ரிஷா தான். வயசானாலும் அழகும் ,ஸ்டைலும் அப்படியே இருக்கு என்ற வசனம் த்ரிஷாவிற்கு தான் பொருத்தமாக இருக்கும் .அவருடைய வயதை யாருமே நம்ப முடியாது அந்த அளவிற்கு இளமையும் பேரழகம் கொண்டு விளங்குபவர் நடிகை திரிஷா.

- Advertisement -

சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகு பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் குந்தவையாக மீண்டும் தமிழ் சினிமாவிற்கு காலடி எடுத்து வைத்திருக்கிறார் நடிகை திரிஷா. அதைத்தொடர்ந்தும் அவர் மீண்டும் நிறைய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு ஜீ தமிழில் ஒளிபரப்பப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் நடிகை திரிஷா சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்தார் அப்பொழுது அந்த நிகழ்ச்சியின் நடுவராக இருந்தவர் பரபல பாடகர் கார்த்திக் .இவர் ஒரு சில திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது . அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரான அர்ச்சனா நடுவர் கார்த்திக் இடம் சிறப்பு விருந்தினர் த்ரிஷாவிற்காக ஒரு பாடலை பாடுங்கள் அவர் திரைப்படங்களில் நிறைய  பாடல் பாடி இருக்கிறீர்கள் தற்பொழுது அவருக்காக ஒரு பாடலை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

- Advertisement -

உடனே பாடகர் கார்த்திக் ஒரு ஸ்மால் க்யூட் ஸ்டோரி என்று அவருடைய பழைய கதை ஒன்றைக் கூறினார் .எனக்கு ஆரம்பத்தில் என்னுடைய பாடகர் பயணம் துவங்கும் அந்த நாட்களில் எனக்கு திரிஷா மீது பயங்கர க்ரஷ் .அதுவும் ஒரு ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் பார்த்து தான் த்ரிஷாவின் மீது எனக்கு பயங்கர க்ரஷ் ஏற்பட்டது என்று கூறினார் .அதற்கு த்ரிஷா இதுவரை இது எனக்கே தெரியாது என்று மறுமொழி கூறினார்.

- Advertisement -

தொடர்ந்து பேசிய பாடகர் கார்த்திக் இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உடைய இசையில் நான் ஒரு பாடலை பாட வந்தேன். அப்பொழுது நான் விசாரித்தேன் இந்த திரைப்படத்தின் கதாநாயகி யார் என்று அப்போதுதான் எனக்கு தெரிய வந்தது நடிகை திரிஷாவின் முதல் படமான லேசா லேசா திரைப்படத்திற்கு தான் பாட போகிறேன். த்ரிஷா என்று தெரிந்ததும் அந்தப் பாடலை உணர்வுபூர்வமாக ஒவ்வொன்றையும் ரசித்து எழுதி பாடினேன் என்று லேசா லேசா திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் அவள் உலக அழகியே என்ற பாடலை பாடி திரிஷாவிற்காக சமர்ப்பித்தார் பாடகர் கார்த்திக்.

அவர் பாடி முடித்ததும் நடிகை திரிஷா இதற்குப் பிறகு நான் உங்களது கிரஷ் ஆகி விட்டேன் என்று கூறினார் .அரங்கமே கைத்தட்டி ஆரவாரம் செய்தது. இத்தனை வயதாகியும் தனக்கு எல்லா பேரும் புகழும் கிடைத்த பிறகும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நடிகை திரிஷா கார்த்திக்கை பார்த்து கிரஷ் ஏற்பட்டுவிட்டது என்று கூறியது பிரம்மிப்பாக இருக்கிறது .ஆனால் இதில் ஆச்சரியம் என்னவென்றால் பாடகர் கார்த்திக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது அவருக்கு அம்பிகா என்ற மனைவியும் ,காதம்பரி என்ற மகளும் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் இவர்களுடைய இந்த உரையாடல் ரசிப்பதற்காக மட்டுமே இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள் இதனால் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்களா இல்லையா என்று கேள்வி குறிக்கு இடம் இல்லாமல் போய்விட்டது.

Most Popular