Thursday, March 28, 2024
- Advertisement -
Homeசினிமாசிவகார்த்திகேயனுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது? மாவீரனால் நொந்து போன எஸ்.கே!

சிவகார்த்திகேயனுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது? மாவீரனால் நொந்து போன எஸ்.கே!

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் திரைப்படம் அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மண்டேலா திரைப்படத்தை இயக்கிய  அஸ்வின் சிவகார்த்திகேயனை வைத்து புதிய பரிணாமத்தில் புதிய கதை களத்தில் எடுக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ அண்மையில் வெளியானது.

இதில் நிழலில் கை ஒன்று சிவகார்த்திகேயனை இயக்குவது போல் இயக்குனர் வீடியோவை வடிவமைத்திருந்தார். இதனால் இந்த படம் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்தப் படத்தில் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்திருந்தார். இந்த படம் திடீரென நிறுத்தப்பட்டதால் படம் கைவிடப்பட்டதாக எதிர்பார்க்கப்பட்டது. இது பற்றி மௌனமாக இருந்த சிவகார்த்திகேயன், பொங்கல் அன்று ரசிகர்களின் சந்தேகத்தை உடைக்கும் வகையில் மாவீரன் படகுழு சார்பாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.

- Advertisement -

தற்போது இந்த படத்துக்கு 45 நாள் சூட் நடத்தப்படுகிறது. மாவீரன் படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சிகள் சிவகார்த்திகேயனுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சிவகார்த்திகேயன் எதிர்பார்த்த அளவு படத்தின் அவுட் புட் இல்லாததால் ஏமாற்றம் அடைந்த அவர் படத்தை மீண்டும் எடுக்க இயக்குனரிடம் அறிவுறுத்திருக்கிறார். இதனால் தயாரிப்பாளரும் அதிர்ச்சி அடைந்ததை அடுத்து படம் பாதியிலே நிறுத்தப்பட்டது.

- Advertisement -

தற்போது படத்திற்கான ஊதியத்தை குறைத்துக் கொள்வதாக சிவகார்த்திகேயன் கூறியதை அடுத்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. சிவகார்த்திகேயனுக்கு திருப்தி இல்லாத காட்சிகளை மீண்டும் சரியாக இம்முறை எடுக்க பட குழு கடுமையாக உழைத்து வருகிறது. மாவீரன் எதிர்பார்த்த அளவு இல்லாததால் மிகுந்த வருத்தத்தில் சிவகார்த்திகேயன் இருந்ததாகவும் அதனை சரி செய்யும் முயற்சியில் தற்போது ஈடுபட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Popular