சினிமா

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய சிவகார்த்திகேயன்.. வேற லெவல்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். தொடர்ந்து காமெடி படங்களாக நடித்து வந்த சிவகார்த்திகேயன் தற்போது மெல்ல மெல்ல ஆக்சன் பக்கம் நகர்ந்து வருகிறார்.

Advertisement

ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என அனைத்து படங்களிலும் ஒரே மாதிரி காட்சி அளித்த சிவகார்த்திகேயன் தற்போது வித்தியாசமாக நடிக்க வேண்டும் என்று பாதைக்கு சென்று இருக்கிறார்.

ரெமோ படத்தில் இதற்கான விதையை சிவகார்த்திகேயன் அப்போதே போட்டு விட்டார். அந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் மீண்டும் ஆக்ஷன் காமெடி என பக்கத்து வீட்டு பையன் போல் காட்சியளிக்கும் வகையில் தான் சினிமாவில் தோன்றினார்.

Advertisement

இந்த நிலையில் தன்னுடைய 21 வது திரைப்படத்திற்காக சிவகார்த்திகேயன் முற்றிலும் வேர லுக்கிற்கு மாறியிருக்கிறார். சிவகார்த்திகேயன் லேசான தாடி வைத்து தான் நாம் பார்த்திருக்கிறோம். மேலும் அழகிய மெல்லிய தேகத்தை சிவகார்த்திகேயன் கொண்டிருப்பார்.

ஆனால் தன்னுடைய புதிய படத்தில் அவர் ராணுவ அதிகாரியாக நடிக்கிறார். இதற்காக சிவகார்த்திகேயன் இரண்டு மாதமாக உடற்பயிற்சி செய்து வருகிறார். இதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. தற்போது சிவகார்த்திகேயன் உடல் வலுப்பெற்று ஜிம் பாய் போல் மாறி இருக்கிறார்.

மேலும் தாடியுடன் சிவகார்த்திகேயன் காட்சியளிக்கிறார். இதனால் தன்னுடைய வழக்கமான ரூட்டில் இருந்து சிவகார்த்திகேயன் மாறி இருக்கிறார் என்பதை காட்டுகிறது. தாடியை எடுத்து விடுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனென்றால் ராணுவ அதிகாரிகள் பெருமளவில் தாடி வைக்க மாட்டார்கள்.சிங்காக இருந்தால் மட்டுமே தாடியுடன் காட்சி அளிப்பார்கள். இதனால் சிவகார்த்திகேயன் பஞ்சாபி சிங் வேடத்தில் நடிக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top